Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Sunday, July 31, 2016

குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பண(தன ஸ்தானம்) வரவு அதிகரிக்கும்?

குரு பகவான், வாக்கிய பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 2 முதல், கன்னி ராசியில் சஞ்சரித்து, பலன்களை வழங்க உள்ளார். சுப கிரகமான, குரு பகவான் அமரும் இடம் பாதிப்படையும் என்பதும், அவர் பார்க்கும், 5, 7, 9ம் ஸ்தானங்கள் சிறப்படையும் என்பதும் பொது விதி. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று.. காசு, பணம் எனப்படும் பொருட்செல்வம். இன்னொன்று.. குழந்தைச் செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திர ஸ்தானங்களின் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும். ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குரு அமையப்பெற்றால் தீர்க்க ஆயுள், நல்ல செல்வம், செல்வாக்கு, சிறப்பான புத்திர பாக்யம், அரசு வழியில் அனுகூலம், தெய்வீக ஆன்மீக துறையில் நாட்டம் உண்டாகும்.

குரு பெயர்ச்சி 2016 - 17
குரு பெயர்ச்சி 2016 - 17
குரு பெயர்ச்சி: 

இந்த ஆண்டு குரு பெயர்ச்சி, ஆடி அமாவாசை, ஆடி 18, ஆடிப் பெருக்கு, முருகனின் நாளான செவ்வாய் அன்று, முருகனின் நட்சத்திரமான பூசத்தன்று, எண் கணிதப்படி கூட்டு எண் ஒன்று என்ற சூரியனின் ஆதிக்கத்தில் வருவதால், பல விசேஷ பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருபகவான் : 

இவ்வாண்டு நல்ல மழை உண்டு; அனைத்து நதிகளிலும், நீரோட்டம் உண்டு; விவசாயம் செழிக்கும்; அறிவியல் முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர் ஜோதிடர்கள் குரு பகவான் அமரும் ஸ்தானம், ஒவ்வொரு ராசியினருக்கும் வேறுபடும். அதேபோல், அவர் பார்க்கும் ஸ்தானங்களும் வேறுபடும் என்பதால், ஒவ்வொரு ராசியினருக்கும் பலன்கள் வேறுபடும்.

எந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்



எந்த ராசிக்காரர்களுக்கு பண(தன ஸ்தானம்) வரவு அதிகரிக்கும் :

2016-2017 குரு பெயர்ச்சியால் அதிக பண வரவு யாருக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள குரு பார்வை யார் ராசிக்கெல்லாம் தன ஸ்தானம்,பாக்யஸ்தானத்தை பார்க்கிறது என அறிந்து கொள்ள வேண்டும்.குரு கன்னியில் இருந்து 5ஆம் பார்வையாக மகரம் ராசியை பார்க்கிறது. அது தனுசு ராசியினருக்கு தன ஸ்தானம் ஆகும்.

குரு பலம் பெற்றவர்கள் :

சிம்மம், ரிஷபம், மீனம், மகரம், விருச்சிகம் இவர்கள் ராசியினருக்கு 2,5,7,9,11 ல் குரு வந்திருப்பதால் இவர்களுக்கும் பணம் சரளமாக வந்து சேரும். இந்த ராசிக்காரர்கள் குரு பலம் பெற்றவர்கள் ஆகின்றனர்.

கும்பம் - ரிஷபம்:

ஏழாம் பார்வையாக மீனம் ராசியை பார்க்கிறது அது கும்ப ராசியினருக்கு தன ஸ்தானம் ஆகும். ஒன்பதாம் பார்வையாக ரிஷபம் ராசியை பார்க்கிறது அது மேஷம் ராசியினருக்கு தன ஸ்தானமாகும். ஆக, இந்த குரு பெயர்ச்சியினால் தனுசு, கும்பம், மேஷம் ராசியினருக்கு நல்ல தன வரவு இருக்கும்.

Friday, July 29, 2016

ஆகஸ்ட் 15ல் ஜியோ புரட்சி : ரிலையன்ஸ் ஜியோ" 4ஜி செல்போன் சர்வீஸ் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் தொடங்குகிறது

ரிலையன்ஸ் ஜியோ" 4ஜி செல்போன் :

நாடு ஆவலுடன் எதிர்பார்த்த "ரிலையன்ஸ் ஜியோ" 4ஜி செல்போன் சர்வீஸ் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் தொடங்குகிறது.

லைஃப் [LYF] என்ற பெயரில் ஜியோ வழங்கும் செல்போன் வாங்கினால், முதல் 3 மாதங்களுக்கு எல்லாமே இலவசம்.  எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்.

ரிலையன்ஸ் ஜியோ" 4ஜி செல்போன்
ரிலையன்ஸ் ஜியோ" 4ஜி செல்போன்

1. டேட்டா டவுன்லோட் செய்யலாம்.
2. அப்லோட் செய்யலாம்.
[வரம்பு கிடையாது.]

ரிலையன்ஸ் ஜியோ லைஃப் போன் இல்லாதவர்கள் கவலைப்பட தேவையில்லை :

அவர்கள் மட்டுமல்ல. எந்த கம்பெனியின் 4ஜி செல்போன் வைத்திருந்தாலும் சரி, அவர்கள் ஜியோவின் 4ஜி சிம் கார்டை இலவசமாக பெறலாம்.

ஏர்டெல், வோடபோன், ஐடியா என நீங்கள் எந்த கம்பெனியின் கஸ்டமராக இருந்தாலும் சரி, உங்களுக்கு ஜியோ சிம் இலவசமாக கிடைக்கும்.

உங்கள் போனில் 2 சிம் ஸ்லாட் இருந்தால் ஒன்றில் ஜியோ சிம்மை போட்டுக் கொள்ளலாம்.
ஜியோவின் மின்னல் வேக இயக்கத்தை பார்த்து மிரண்டு போய் நீங்கள் மற்ற கம்பெனி சேவையை துண்டித்து ஜியோவில் ஐக்கியம் ஆவீர்கள் என முகேஷ் அம்பானி எதிர்பார்க்கிறார்.

ஒரு செல்போன் மூலம் இத்தனையும் சாத்தியமா..? என்று மக்கள் அதிசயிக்க வேண்டும்.

இத்தனையும் வழங்கும் சேவைக்கு இவ்வளவுதான் கட்டணமா என்று மக்கள் ஆச்சர்யப்பட வேண்டும். அப்போது அவர்கள் எதிர்பார்க்காத மேலும் பல சேவைகளை இலவசமாக வழங்க வேண்டும். இதுதான் என் ஆசை” என்கிறார் முகேஷ்.

லைஃப் செல்போன்கள் இப்போது 2,999 ரூபாய் முதல் 19,599 வரை விலையில் கிடைக்கின்றன: 

ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் லைஃப் பிரான்டின் கீழ் புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லைஃப் வாட்டர் 8 என அழைக்கப்படும் இந்தக் கருவியும் மற்ற லைஃப் கருவிகளை போன்றே 4ஜி வோல்டிஇ 'VoLTE' தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்தக் கருவி இந்தியா முழுக்க இயங்கும் அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ.10,999 என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற 4 பிரிவுகளில் 14 போன்களை ஜியோ விற்பனை செய்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ" 4ஜி செல்போன் சர்வீஸ்
ரிலையன்ஸ் ஜியோ" 4ஜி செல்போன் சர்வீஸ்
ஜியோவின் யுஎஸ்பி என்ன தெரியுமா? :

லோக்கல், எஸ்டிடி கால்கள் முற்றிலும் இலவசம்.
ஆமாம். இந்தியாவுக்குள் எத்தனை கால் வேண்டுமானாலும் பேசலாம். கட்டணமே கிடையாது.
டேட்டாவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க ஜியோ முடிவு செய்துள்ளது. அதுவும் மற்ற கம்பெனிகள் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைவிட மிக மிக குறைவாக. சரியாக சொன்னால் 96 சதவீதம் குறைவாக.

அதாவது மற்ற 4ஜி கம்பெனிகள் 10 ஜிபிக்கு 900 முதல் 1,150 ரூபாய் கட்டணம் வைத்துள்ள நிலையில், ஜியோ வெறும் 97 ரூபாய் கேட்கிறது.

சுதந்திர தினத்தில் ரிலையன்ஸ் ஜியோ தொடங்கும் புதிய தகவல் தொடர்பு புரட்சியை ரசித்து அனுபவிக்க தயாராகுங்கள்.

Thursday, July 21, 2016

தமிழக சட்டசபையில் 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியவை ?

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று திருத்தப்பட்ட முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்பார்த்ததை போலவே, வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

மேலும், வரி ஏதுமற்ற பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பட்ஜெட்டில், வரி விதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே இது வரியற்ற பட்ஜெட்டாக அமைந்தது.

தமிழ்நாட்டின் கடன் அளவு 2.52 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ஓபிஎஸ் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியவை

தமிழக பட்ஜெட் அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியவை :

7 சம்பள கமிஷன் அறிவிப்பு:

மத்திய அரசின் 7 சம்பள கமிஷன் அறிவிப்புகளை விரைவாக அமல்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என நிதியமைச்சர் தமிழக அரசு சார்பாக உறுதியளித்துள்ளார்.

வறுமை ஒழிப்பு:

நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையில் முக்கியப் பணிகளைச் செய்யத் தமிழ்நாடு அரசு 355.81 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

நகரப்புற வளர்ச்சி:

தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களையும் தாண்டு முக்கியமான நகரங்களில் வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளைச் செய்ய 350 கோடி ரூபாய் நிதித்தொகையை அறிவித்துள்ளது.

டாஸ்மாக் :

தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாகக் கொண்டு வருவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்ன முதல்வர் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடினார் இதனால் தமிழக அரசுக்கு 6,636.08 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின்சார மானியம்:

100 யூனிட் குறைவாக இருக்கும் அனைத்து வீடுகளுக்குத் தமிழக அரசு இலவச மின்சாரம் என்ற திட்டத்தை அறிவித்தது. இதனால் 1,607கோடி ரூபாய் வருவாய் இழப்பு. மின்சாரத் துறைக்கான மானியத்திற்காக 9,007 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சோலார் மின்சாரம்:

அடுத்த ஒரு வருடத்தில் தமிழ்நாட்டில் 20,000 வீடுகளுக்கான மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவிற்கு 420 கோடி ரூபாய் முதலீட்டு புதிய சோலார் மின்சாரத் திட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது

மின்சார துறை :

அடுத்த ஒரு ஆண்டில் அனல் மின்சாரம் 13000 மெகாவாட்டாகவும், சூரிய மின்சாரம் 3000 மெகாவாட்டாகவும் அதிகரிக்கப்படும். 5 ஆண்டுகளில் இதை 18,500 மெகாவாட்டாக உற்பத்தி அதிகரிக்கப்படும். மின் துறைக்கு ரூ.13,856 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

போக்குவரத்துறை:

புதிய பேருந்துகள் வாங்க 125 கோடி ரூபாயும், இத்துறை வளர்ச்சிகளுக்காக 1,295.08 கோடி ரூபாய் நிதியைத் தமிழக ஒதுக்கியுள்ளது. இதனுடன் வருவாய் துறைக்கு 5,600 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளது.

உழவர் மற்றும் விவசாயம்:

உணவு தானிய உற்பத்தி இலக்கு ரூ147 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது, இதனுடன் உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ206 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மருந்துவக் காப்பீடு:

முன் கலைஞர் காப்பீடாக இருந்து தற்போது முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக மாறியுள்ள இந்த மருந்துவக் காப்பீடு திட்டத்திப்கு ரூ 928 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம்:

சென்னையில் பல ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த மெட்ரோ ரயில் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்த நிலையில், 2வது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்தார்

முதலீட்டாளர்கள் மாநாடு :

முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்களிடம் இருந்து இது வரை ரூ.23,500 கோடி முதலீடாக வந்துள்ளன.

ஃபோர்டு ஆராய்ச்சி மையம் :

கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு வாகனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான ஆராய்ச்சி மையத்தைத் துவங்க உள்ளது.

தொழில் துறை :

தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சிக்காக ரூ. 2,104.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைத் துறை :

ரூ. 1541 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இருக்கும் இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலைகள் விரிவாக்கம் செய்யபடும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் :

100 நாள் வேளை திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.7.155 கோடி நிதி ஒதுக்கீடு.

ஊதியக்குழு பரிந்துரைகள் :

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும்.

தமிழகச் சட்டசபை 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் ?

தமிழகச் சட்டசபையில் இன்று காலை 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் ஒ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று திருத்தப்பட்ட முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்பார்த்ததை போலவே, வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது துறைவாரியாக அவர் ஒதுக்கிய நிதி விவரம்:

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.79% ஆக இருக்கக் கூடும் என கணிப்பு -தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ40,533.84 கோடி

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதற்கான நிதி உதவித் திட்டம் தொடரும்

ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்துக்கு ரூ703.16 கோடி நிதி ஒதுக்கீடு

சத்துணவுத் திட்டத்துக்கு ரூ1644 கோடி நிதி ஒதுக்கீடு

அரசு அலுவலர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் பழங்குடியினர் தொழில் தொடங்க ரூ130 கோடி நிதி ஒதுக்கீடு

முதியோர் உதவித் தொகை திட்டத்துக்கு ரூ3,820 கோடி ஒதுக்கீடு
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டத்துக்கு ரூ582.58 கோடி

பள்ளி மாணவர்களுக்கான இலவச திட்டங்களுக்கு ரூ2,705 கோடி நிதி ஒதுக்கீடு

கல்வி உரிமை சட்டப்படி அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்க ரூ125.70 கோடி ஒதுக்கீடு

பள்ளி கட்டிடங்களை மேம்படுத்த ரூ330.60 கோடி ஒதுக்கீடு

முத்துலெட்சுமி மகப்பேறு மருத்துவ திட்டத்துக்கு ரூ668 கோடி நிதி ஒதுக்கீடு

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதல் மாநில விருதை தமிழகம் பெற்றுள்ளது

10 மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 7 மாவட்ட தலைமை மருத்துவமனை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்

சுகாதாரத்துறைக்கு ரூ9,073 கோடி நிதி ஒதுக்கீடு

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50% ஆக அதிகரிப்பு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ11,514.34 கோடி நிதி கிடைக்கும்

18 கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன

வீட்டு வசதித் துறைக்கு ரூ689 கோடி ஒதுக்கீடு

தூய்மை தமிழகம் திட்டத்துக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ11,820 கோடி ஒதுக்கீடு

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7.66 லட்சம் வீட்டு கழிவறைகள்

20,000 பசுமை வீடுகள் கட்டப்படும்

இலவச வேட்டி, சேலைக்கு ரூ487.45 கோடி ஒதுக்கீடு

எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுக்கு ரூ470 கோடி நிதி ஒதுக்கீடு

நடப்பாண்டில் 12,000 கறவை மாடுகள் வழங்கப்படும்

ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ21,186 கோடி நிதி ஒதுக்கீடு

வெள்ளம் பாதித்த பகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ரூ30 கோடி ஒதுக்கீடு

முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ23,500 கோடி முதலீடு வந்துள்ளன

தொழில்துறை வளர்ச்சிக்கு ரூ2,104.49 கோடி ஒதுக்கீடு

ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் வாகன ஆராய்ச்சி மையத்தை தொடங்குகிறது

இலவச லேப்டாப், சீருடைகள், பாடநூல்கள் வழங்க ரூ2,705 கோடி ஒதுக்கீடு

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ32.94 கோடி ஒதுக்கீடு

500 கிராம கோவில்கள் சீரமைக்கப்படும்

2.49 லட்சம் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது

அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 18,500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்

100 யூனிட் இலவச மின்சாரத்தால் 1.90 கோடி பேர் பயனடைகின்றனர்

தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை

மின்சார தேவை மற்றும் உற்பத்தி இடையே இடைவெளி சரி செய்யப்பட்டுவிட்டது

5 ஆண்டுகளில் 8432.50 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது

இணையம் வழியே ரேசன் கார்டு முகவரி மாற்றத்துக்கு ஏற்பாடு

அடுத்த 5 ஆண்டுகளில் 13,000 மெகாவாட் அனல்மின்சாரம், 2500 மெகாவாட் புனல் மின்சாரம் உற்பத்தி

சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ1230 கோடி ஒதுக்கீடு

நெல்லை- கொல்லம், ஒட்டன்சத்திரம்- திருப்பூர் சாலைகள் 4 வழி சாலையாகிறது -ரூ1541 கோடி செலவில் 4 வழிச் சாலைகளாக மாநில நெடுஞ்சாலைகள் விரிவாக்கம்

ரூ6 ஆயிரம் கோடிக்கு புதிய பயிர்க் கடன்கள் வழங்கப்படும்

தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்

நீர்வளங்கள் ஆதார துறைக்கு ரூ3402 கோடி ஒதுக்கீடு

தொழில்துறைக்கு ரூ2104.99 கோடி நிதி ஒதுக்கீடு

மேலும் 30 கோயில்களில் அன்னதான திட்டம்

வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கான நிதி உதவித் தொகை அதிகரிப்பு

வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறைக்கு ரூ 652.78 கோடி ஒதுக்கீடு

சென்னை, சுற்றுப்புற ஏரிகளை சீரமைக்க படிப்படியாக நடவடிக்கை

மீன்வளத்துறைக்கு ரூ 743..73 கோடி ஒதுக்கீடு

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ1188.17 கோடி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சிதுறைக்கு ரூ21,186 கோடி ஒதுக்கீடு

2வது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ1188.17 கோடி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சிதுறைக்கு ரூ21,186 கோடி ஒதுக்கீடு

2வது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ1188.17 கோடி ஒதுக்கீடு

பால் பொருட்களைத் தயாரிக்கும் மையம் மதுரையில் அமைக்கப்படும்

பள்ளி கல்வித்துறைக்கு ரூ24,130 கோடி நிதி ஒதுக்கீடு

சுகாதார துறைக்கு ரூ9073 கோடி ஒதுக்கீடு

கறவை மாடு வாங்க நிதி ரூ30,000-ல் இருந்து ரூ35,000 ஆக உயர்வு

1 லட்சம் குடும்பங்களுக்கு 4 லட்சம் வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கப்படும். இலவச ஆடு, மாடு வழங்க ரூ182 கோடி ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு ரூ 1429.94 கோடி

கடலூர் மாவட்டத்தில் ரூ140 கோடி செலவில் ஆற்றங்கரைகள் மேம்படுத்தப்படும்


பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ 208 கோடி ஒதுக்கீடு

பண்ணை இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படும்

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ரூ 928 கோடி ஒதுக்கீடு

தோட்டகலைத்துறைக்கு ரூ511 கோடி ஒதுக்கீடு

பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

உதவித் திட்டங்கள், மானியங்களுக்கு ரூ68,211 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சித் தேர்தலை நடத்த ரூ183.24 கோடி ஒதுக்கீடு

உணவு தானிய உற்பத்தி இலக்கு ரூ147 லட்சம் மெட்ரிக் டன்

உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ206 கோடி ஒதுக்கீடு

வருவாய்த்துறைக்கு ரூ5600 கோடி ஒதுக்கீடு

அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர கூட்டுப் பட்டாக்கள் வழங்கும் திட்டம்

போக்குவரத்து துறைக்கு ரூ1295.08 கோடி நிதி ஒதுக்கீடு 2,000 புதிய அரசு பேருந்துகள் வாங்க ரூ125 கோடி ஒதுக்கீடு

மின்சாரத்துறைக்கு மானியமாக ரூ13,856 கோடி ஒதுக்கீடு

லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும்

தமிழக அரசின் கடன் ரூ2.52 லட்சம் கோடி

திருத்திய பட்ஜெட் மதிப்பீடு 1,48,175.09 கோடி

அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை

சிறைச்சாலை துறைக்கு ரூ282.92 கோடி ஒதுக்கீடு

தீயணைப்புதுறைக்கு ரூ230.7 கோடி ஒதுக்கீடு

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும்

சமூகல நலத்துறைக்கு ரூ4512.32 கோடி ஒதுக்கீடு

100 யூனிட் இலவச மின்சாரத்தால் அரசுக்கு ரூ1607 கோடி இழப்பு

நாட்டிலேயே முதல் முறையாக கடற்கரை ஊர்க்காவல் படைக்கு 500 மீனவர் இளைஞர்கள் சேர்ப்பு

தமிழகத்தில் இடதுசாரி தீவிரவாத சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளன

உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ1,000-ல் இருந்து ரூ1,500 ஆக உயர்வு

தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ32.4 கோடி ஒதுக்கீடு

தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கு ரூ703.16 கோடி

மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ரூ105.97 கோடி ஒதுக்கீடு

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ396.74 கோடி ஒதுக்கீடு

அடுத்த ஓராண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தொழில் கட்டமைப்பு நிதியத்துக்கு ரூ2,000 கோடி ஒதுக்கீடு

மின்சார மானியத்துக்கு ரூ9,007 கோடி ஒதுக்கீடு

திறன்மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ150 கோடி ஒதுக்கீடு

500 டாஸ்மாக் கடைகளை மூடியதால் ரூ6,636.08 கோடி இழப்பு

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ4 ஆயிரத்தில் இருந்து ரூ5,000 ஆக உயர்வு

நகர்ப்புற வாழ்வாதார திட்டத்துக்கு ரூ350 கோடி ஒதுக்கீடு

வறுமை ஒழிப்பு திட்டத்துக்கு ரூ355.81 கோடி ஒதுக்கீடு

ரூ422 கோடியில் போலீசாருக்கு 2673 வீடுகள் கட்டித் தரப்படும்

ரூ52.64 கோடியில் ஆற்றங்கரை ஓரங்களில் மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

அடுத்த ஓராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்படும்

ரூ24.58 கோடியில் வைகை, நொய்யல் ஆறுகள் தூர்வாரப்படும்

சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ300 கோடி ஒதுக்கப்படும்

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ15,854.47 கோடி

அடுத்த ஓராண்டில் ரூ420 கோடியில் சூரிய ஒளி மின்வசதி கொண்ட 20,000 வீடுகள் கட்டப்படும்

அடுத்த ஆண்டில் 5.35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்

5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ11,514.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 19, 2016

குரு பெயர்ச்சி 2016 : மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்

குரு பெயர்ச்சி 2016 :

நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபகவானை பற்றி தெரிந்து கொள்ளுவோம்!! வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.

குரு பெயர்ச்சி 2016
குரு பெயர்ச்சி 2016 :  மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்
மேஷம் ராசி:

மேஷம் ராசி நண்பர்களே இது வரை ஐந்தாம் வீட்டில் இருந்த குருபகவான் இவ்வருடம் ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்திற்கு வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்க ராசிக்கு பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு 6 ல் வருவது ஒரு வகையில் நன்மையே.

அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அஷ்டமத்து சனியால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நல்லவிதத்தில் நடக்கும்.திறமை அறிவுக்கு ஏற்ற அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரயமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. 12 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதியே குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும் .பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும்.தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது. சுபவிரயமாக மாற்ற வீடு, மனை வாங்கும் வாய்ப்பும் வரும். வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது. இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். தாங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தை தனகாரகன் குருவே அந்த ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். அஷ்டமத்து சனியால் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். சிலருக்கு கோர்ட் வரை சென்ற வழக்குகள் சாதகமாகும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம்.குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மொத்தத்தில் 60 சதவிகிதம் நன்மைகள் நடக்கும். 

பரிகாரம்: 

வியாழக்கிழமை சித்தர்கள் ஜிவசாமதிகளில் தரிசனம் செய்வது நல்லது. பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் கோயில்களில் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்வது நல்லது.   

ரிஷபம் ராசி:

ரிஷபம் ராசி நண்பர்களே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது கொடுத்ததை வாங்க முடியல வாங்கியதை கொடுக்க முடியல என்ற குழப்பத்துடனே காலத்தை ஓட்டிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்கு வருகிறார் ஏற்கனவே 9 க்கும் 10 க்கும் அதிபதி ராசியை பார்த்ததால் உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடத்துடன் காலத்தை ஓட்டினீர்கள். புது காரியங்கள் தொட்டது துலங்க வில்லை. ராசிக்கு அட்டாமாதிபதி குரு சுக ஸ்தானமான 4 ல் இருந்ததால் உடலும் மனசும் வருத்தியது. போகாத கோயில் இல்லை.பார்க்காத வைத்தியம் இல்லை.இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும்.கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். 

திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். 11 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதி குருவே பார்ப்பதால் வழக்கு வியாஜ்யங்களில் சிக்கி இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவார்கள். சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம்.சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும்.வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும்.எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம்.புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழது தான் கிடைக்க போகிறது. கன்னி ராசியில் குரு பகை என்பார்கள். ராசிநாதன் புதன் தான் பகையே தவிர அதில் உள்ள முன்று நட்சத்திரங்களுக்குறிய அதிபதிகளான சூரியன் சந்திரன் செவ்வாய் மூவருமே குருவுக்கு நட்பே. அதனால் உயர்வான முன்னேற்றத்தை தரும். தற்சமயம் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடாதிர்கள்.நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விடுங்கள். கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த காலம் ஆடி 18 க்குமேல் வருகிறது. 13 மாதமும் நன்மையே. 80 சதவிதம் நன்மையே நடக்கும். 

பரிகாரம்: 

புதன் பெருமாள் அம்சம் அவருடைய வீட்டில் குரு இருப்பதால் சிவன் கோயிலில் பெருமாள் சந்நிதி இருக்கும் கோயிலில் உள்ள மேதா தெட்சினாமூர்த்தியை வணங்கவும்.


குருப்பெயர்ச்சி பலன்கள் 2016 (மேஷம் முதல் கன்னி வரை)
மிதுனம் ராசி :

மிதுனம் ராசி நண்பர்களே! இதுவரை முன்றாம் பாவத்தில் மறைந்த குருபகவான் ஆடி மாதம் முதல் தாங்கள் ராசி நாதன் வீட்டிற்க்கு வருகிறார். தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனது என்பது பாடல் அதுபடி இந்த குருபெயர்ச்சி அமையுமா.? இது பொதுவானது தான். ராசிக்கு 4 ல் வரும் குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் 8 ஆம் பாவம் அபகீர்த்தி ஸ்தானம் என்று பெயர். அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் தங்களை நாடி வரும் காலம். பாதகாதிபதி கேந்திரத்தில் வரும் பொழுது மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரும். புது நண்பர்கள் ஆதரவு அனுகூலம் ஆதாயம் கிடைக்கும் மனைவி வகையில் சிறுசிறு வைத்திய செலவுகள் வரலாம். சில ஜாதகர்கள் கல்யாணம் ஆகியவுடன் தாம் சம்பாதிக்கும் பணத்தை மனைவி வீிட்டாருக்கு செலவழித்து தங்களுடைய தாய் தந்தை சகோதரிகளிடம் பகையை பெறுவார்கள். 

ஏழாம் அதிபதி குரு பாதகாதிபதி ஆவதால் அவ்வாறு பிரச்சனைகள் வரலாம். பத்தாம் வீட்டை அந்த பாவாதிபதி குருவே பத்தாம் பாவத்தை பார்ப்பதால் இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிய லாபம் எல்லாம் வரும். உத்யோக உயர்வு பதவி முன்னேற்றம் வெளிநாட்டு தொடர்பு. வேலை கிடைக்கலாம். மாற்றம் முன்னேற்றத்தை தரும். 12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை இழந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் எல்லாம் இனிதே நடக்கும். கேந்திரத்தில் சுபகிரகம் வரும் கேந்திராதிபதி தோஷத்தை தானே தர வேண்டும் சந்தேகம் வரலாம். 4 ஆம் பாவம் மட்டுமே ஸ்தான பலம் இழக்கும். அதாவது வண்டி வாகன விரைய செலவுகள்.சிலருக்கு சொந்த வீடு சொகுசா இருக்கும். பணி நிமித்தம் காரணமாக வாடகை வீட்டிற்கு போவது இது தான் பாதக பலன். 

பரிகாரம்: 

இன்பத்தில் துன்பம்,துன்பத்தில் இன்பம் மாறிமாறி வரும் நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்யவும். பெருமாள் வழிபாடு புதன்கிழமை செய்வது நல்லது.

கடகம் ராசி : 

கடகம் ராசி நண்பர்களே! இது வரை இரண்டாம் பாவத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்துக்கு மாறுகிறார் ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். ராசிக்கு 6 க்கும் 9க்கும் உடையவர். எப்பொழுதும் குரு மாறும் பொழுது யோகத்தை செய்வார். பாக்கிய ஸ்தானத்தை பாக்கியாதிபதி பார்த்தால் சகல பாக்கியமும் சேரும். இரண்டுல குரு என்று எல்லா காரியத்திலும் இறங்கி எல்லாமே விட்ட குறை தொட்ட குறை என்று பாதியிலே நின்று மன உளைச்சல் தந்தது. குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீிர்கள். 

திருமணம் தாமதமாகி நிற்பவர்கள் இனிதே திருமணம் நடக்கும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள் அல்லது மறுவாழ்க்கை அமையும். கூட்டு தொழில் வெளிநாட்டு பயணம் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் பாக்கியதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கப் போவதால் இது நாள் வரை கோயில் குளம் சுற்றி உங்கள் கோரிக்கைகளை வைத்து அதில் ஏமாற்றம் அடைந்த உங்களுக்கு நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப ஸ்தானத்தை ஓன்பதாம் அதிபதி பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். குரு 6 பாவத்துக்கு 6 ஆம் பாவமான 11ஆம் வீட்டை பார்க்க போவதால் ஆரோக்கியம் நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும். மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை செல்விர்கள்.

பரிகாரம்: 

கடக ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் அம்பாள் அனுகிரகம் பெற்றவர்கள் திங்கள் கிழமைகளில் அம்பாள் வழிபாடும் குருபகவானை தரிசிப்பதும் நல்லது.பௌர்ணமி விரதம் இருப்பதும் நன்று. கடகராசி லக்னத்தில் பிறப்பவர்கள் ஓரு முறையாவது கொல்லூர் மூகாம்பிகையை தரிசிப்பது நல்லது.

சிம்மம் ராசி: 

சிம்மம் ராசி நண்பர்களே இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் குடும்பம், பணம், கண்கள், வாக்கு, நாணயம் ஆகியவற்றை குறிக்கும் 2 ஆம் பாவத்துக்கு வருகிறார். தனகாரகன் குரு தனஸ்தானத்தில் வரும் பொழுது தன ஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம். பொதுவாக கடகம் மற்றும் சிம்ம ராசிக்கு குரு யோகாதிபதி எனவே குருவால் பாதகம் வராது. அதே சமயம் செலவுகள் கூடும் ஆனால் வருமானமும் வந்து கொண்டே இருக்கும். அவரின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளை பார்க்க போவதால் வரும் பிரச்சனைகள் பெரிதாக தெரியும். ஆனால் சூரியனை கண்ட பனிபோல மறைந்து விடும்.வாக்கு ஸ்தானத்தில் குரு வருவதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். செல்வ நிலை திருப்தி தரும். திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும். தொழில் வேலை வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும்.அதே போல் நோய் நொடி சீக்கு பிணி கேடுகள் மறையும் கடன் தொல்லைகள் குறையும். புது தொழில்கள் துவங்க நல்ல காலம் இப்பொழது.இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை உத்தியோகம் முன்னேற்றம் மாற்றமும் வரும்.சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். மொத்ததில் 80 சதவிதம் நன்மைகள் நடைபெறும். 

பரிகாரம்: 

வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது. சிம்ம ராசிக்காரர்கள் பிரதோச வழிபாடு செய்வது நல்லது.

கன்னி ராசி :

கன்னி ராசி நண்பர்களே இதுவரை 12 ஆம் பாவத்தில் இருந்த குருபகவான் ஓருவரின் புகழ் கௌரவம் அந்தஸ்து தேகபலம் ஆயுள் ஆகியவற்றை குறிக்கும் ஜென்ம ராசிக்கு வருகிறார். ‘ஜென்ம ராமர் வனத்திலே' என்று பாடல் ஜென்ம ராசி என்பது புகழ் கிர்த்தி ஸ்தானம் என்று பெயர் 4 க்கும் 7க்கும் அதிபதியான குரு ராசிக்குள் வரும் பொழது புது முயற்சிகள் கைகூடும்.தொட்டது துலங்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். கடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். அதே போல் 7 ஆம் இடத்தை குரு பார்க்கப்போவதால்.கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும். ஜென்ம ராசிக்குள் குருவந்தால் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உண்ணாமல்,சரியாக தூக்கமும் இருக்காது எனவே உணவு உறக்கம் இவற்றில் எல்லாம் விழிப்புணர்வுடன் இருங்கள். என்ன தான் முயற்சி செய்தும் என்ன தான் உருண்டு புரண்டு பாடுபட்டாலும் இது வரை கருனை செய்யாத தெய்வம் இப்பொழது கருணை மழை காட்டப்போகிறது அது 9 ஆம் வீட்டை குருபார்த்த பலன் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி. 

பரிகாரம்: 

புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை சாற்றுங்கள். அதே போல் ஹயக்ரீவரையும் வழிபாடு செய்யலாம். 70 சதவிதம் நன்மையை நீங்கள் எதிர்பார்க்கலாம். 

குரு பெயர்ச்சி 2016  - 12 ராசிகளுக்கும் பலன்கள்
குரு பெயர்ச்சி 2016  - 12 ராசிகளுக்கும் பலன்கள்
துலாம் ராசி :

துலாம் ராசி நண்பர்களே இது வரை லாபஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் 12 ஆம் பாவமான விரையம் மோட்சம் வெளிநாட்டு பயணம் சொந்த வீடு தூக்கம் போகம் ஆகிய காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டுக்கு வருகிறார். பொதுவாக துலாம் ராசி துலாம் லக்னத்துக்கு குரு வலுபெற கூடாது குரு பகவான் 3க்கும் 6 க்கும் இருமறைவு ஸ்தானதிபதியாவர் 6க்குடையன் 12 ல் மறைவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும் பொதுவாக மீனம் தனுசுக்கு சுக்கிரன் நன்மை செய்ய மாட்டார் அதே போல துலாம் ரிஷபம் ஆகிய ராசிக்கு குரு நன்மையை செய்யமாட்டார் அப்படி நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது நாலாம் பாவம் சுக ஸ்தானம் என்று பெயர். 

வீடு மனை தாயார் வாகன சுகம் ஆகியவற்றை பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் அசையா சொத்துகளால் கோர்ட் வம்பு வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும் வண்டி வாகனம் மாற்றம் வரும் வீடு விஸ்தரிப்பு செய்வதுடன் வீட்டை புதுப்பித்து கட்ட கூடிய வாய்ப்பு வரும். 6 ஆம் இடத்தை பார்க்கப் போவதால் ஏழரை சனியால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியமால் தடுமாறி தலைமறைவாகிய உங்களுக்கு கடன்கள் அடைபட போதுமான வருமானம் வரும். முடங்கிய தொழில்கள் லாபம் தரும். 6 ஆம் பாவம் உத்யோக ஸ்தானத்துக்கு 9 ஆம் பாவமாவதால் செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும். இது வரை இருந்த நோய், நொடி,சீக்கு பிணி கேடுகள் மறையும். மருந்து மாத்திரை மருத்துவமனை செலவுகள் விலகும். உத்தியோகம் சம்பந்தமாக கோர்ட் வழக்குகள் இருந்தால் சாதகமாக தீர்ப்பால் இதுவரை கிடைக்க வேண்டிய பணங்கள் கைக்கு வரும். இதுவரை பகையாக இருந்தவர்கள் நட்பாக மாறுவார்கள். 8 ஆம் வீட்டை குருபார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் ஏன் என்றால் 7 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடு 8ம் இடம். கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும் வியாபார விஸ்தரிப்பு வெளிநாட்டு பயணம் ஏற்படும் நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். மொத்தத்தில் 70 சதவிதம் நன்மைகள் நடக்கும். 

பரிகாரம்: 

பெருமாள் கோயில் அர்ச்சகர்களுக்கு பச்சரிசி தானமாக கொடுப்பது நல்லது. யானைக்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவது நல்லது. வியாழக்கிழமை பெருமாள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடு செய்வதும் நல்லது.

விருச்சிகம் ராசி:

விருச்சிகம் ராசி நண்பர்களே! ஆடி மாதம் முதல் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் மூத்த சகோதரம், லாபம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் 11ம் பாவத்திற்க்கு மாறுகிறார். ஏற்கனவே கர்ம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் கர்ம காரகன் சனியின் பார்வையில் இருந்ததால் சில ஜாதகர்கள் பெற்றோர்களுக்கு கருமம் வைத்திய செலவுகளை செய்ய வைத்தது. அதுவும் தகப்பன் காரகன் சூரியன் தை மாதம் மகரத்தில் வந்த பொழது சனியின் முன்றாம் பார்வை பெற்றவுடன் பலர் பெற்றோருக்கு கருமம் செய்தார்கள். உங்க ராசிக்கு 2 க்கும் 5க்கும் உடைய குரு உங்க ராசிக்கு முழுமையான சுபராவார்.அவர் லாப ஸ்தானம் ஏறி. 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அப்பா அம்மா இருந்து செய்ய வேண்டியதை சகோதரன் முன்னிலையில் இருந்து செய்வார்கள். சிலருக்கு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும். அது நல்ல மாற்றமாக இருக்கும். 

பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை பாவாதிபதி குருவே பார்க்கிறார். ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பிர்கள். நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள். நல்ல வேலைக்கு முயற்ச்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம். பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.கஷ்டபட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள். அடுத்தது ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார்.களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும்.ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தரும். இது வரை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த முதுகுவலி. இடுப்புவலி, முட்டுவலி போன்ற நோய்கள் விலகும். 

பரிகாரம் : 

முருகப்பெருமானையும் தெட்சிணாமுர்த்தியையும் வணங்குவது நல்லது. மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் கிடைக்கும் .

தனுசு ராசி :

தனுசு ராசி நண்பர்களே கடந்த ஓரு வருஷமாக பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் பத்தாம் பாவமான தொழில், கங்கா ஸ்தானம், மாமியார் வீடு கர்மா ஸ்தானம் என்ற இடத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார்.ராசிநாதன் குரு கோசாரத்தில் பத்தில் வந்தால் பாதகமா?. சாதகமா?. என்றால் 9 ல் இருந்த குரு சாதகமான நன்மைகளை செய்தார் என்றால் 75 சதவிதம் பேர் நன்மைகளை அடைந்து இருப்பார்கள். கோசாரத்தில் ஏழரை சனி இருப்பதால் கடந்த காலங்களில் ஏமாற்றம் சஞ்சலம் விரக்தி வேதனை அனுபவித்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமாக நல்ல பலனை தரும். குரு பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். ஜாதகத்தில் தனகாரகன் குரு தனஸ்தானத்திற்கு 9 ல் வருகிறார். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார்.குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றி விடலாம்.பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள்.வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும். தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார். தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகமும்,ரொம்ப நாளாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நீங்கி நலமும் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். தன்னுடைய 9 ஆம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். கடன்கள் கோர்ட் வழக்குகள் முற்றிலும் அகலும். புது முயற்சிகள் கை கூடும்.தொழில் அபிவிருத்தி ஏற்படும்.செய் தொழில் வளர்ச்சி பெறும் 60 சதவிதம் நன்மையே நடைபெறும்.

பரிகாரம்: 

சிவன்கோயிலில் உள்ள தெட்சிணாமுர்த்தி,மற்றும் நவகிரக சன்னிதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தரிசிப்பது நல்லது.  

குருப்பெயர்ச்சி பலன்கள் 2016 (துலாம் முதல் மீனம் வரை)
மகரம் ராசி : 

மகரம் ராசி நண்பர்களே இது வரை அஷ்டமத்து ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் ஓன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை. தீர்த்தயாத்திரை தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு வருகிறார். பொதுவாக ராசிக்கு 3, 12, க்குடையவர் குரு. ராசிக்கு நன்மை செய்யாத கிரகம் குரு. இவர் மறைவு ஸ்தானத்தில் வரும் பொழது நன்மைகளை செய்வார் திரிகோனத்தில் வரும் பொழது நன்மையை செய்வாரா?. நல்லதையும் செய்வார் கெடுதலையும் செய்வார். ஜந்தாம் பார்வையாக ராசியை பார்க்கிறார் ஜாதகத்தில் ராசி என்பது புகழ் கிர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம். 

'ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு' என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும்.நீண்ட காலமா வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும்.இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். முன்றாம் பாவத்திற்கு பாவாதிபதி குருவே பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும். மன ஆழுத்தம் அச்ச உணர்வு ஆகியவை நீங்கும். அடுத்தது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக ஆண் வாரிசுக்கு ஏங்கியவர்களுக்கு எல்லாம் ஆண் வாரிசு யோகம் வரும். உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பணம் எக்கசக்கமா இருக்கே என்று உறவினர்கள் குழைவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.மற்றபடி கவலைபட வேண்டாம். 75 சதவிதம் நன்மைகள் நடக்கும் 

பரிகாரம்: 

பெருமாள் கோயில் வழிபாடு நன்மை தரும்.சனிக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.

கும்பம் ராசி:

கும்ப ராசி நண்பர்களே கும்பம் ராசிக்கு இது வரை ஏழாம் பாவத்தில் இருந்த குரு ஆடி மாதம் முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம்தானே யோகத்தை அனுபவித்தவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் 75 சதவிதம் இருக்கும் சிலருக்கு கடந்த காலங்களில் கிணற்றுக்குள் போட்ட கல்லை போல செயல்பாடுகள் முடங்கி தான் இருந்தது. கும்பத்திற்கு 8 ல் வரும் பொழுது குருபகவான் கெடுதலை செய்ய மாட்டார். 

கன்னி ராசியில் இருக்கும் குரு 12 ஆம் பாவத்தை பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். அதே நேரத்தில் தன ஸ்தானத்தை தனாதிபதி குருவே பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். சேமிப்புகள் கூடும் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பூர்விக சொத்துகள் விற்பதன் முலமாக அல்லது வாங்கிய சொத்துகள் நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும். 4 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் சிலர் அசையா சொத்து வாங்குவார்கள்.புது வீடு கட்டி குடிபோவார்கள்.சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். சிலருக்கு கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழு கடனையும் அடைப்பார்கள் புது முயற்சிகள் கை கூடும்.தொழில் லாபம் கூடும் தற்சமயம் வேலையில் முன்னேற்றம் வரும். 8ல் உள்ள குரு உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை. 

பரிகாரம்: 

வியாழக்கிழமை முருகப்பெருமானையும் கூடிய குருபகவானையும் வணங்கலாம். மொத்ததில் 70 சதவிதம் நல்லது நடக்கும்.

மீனம் ராசி :

மீன ராசி நண்பர்களே! கடந்த ஆண்டு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து ராசியை பார்க்கிறார்.அஷ்டமத்து சனியில் கூட இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வில்லை!. ஆனால் கடந்த ஆண்டு பட்ட பாடு சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனையை உருவாக்கி விட்டது. பொதுவாக ராசி நாதனோ தசா நாதனோ உச்ச ராசியை நோக்கி போனால் ஆரோகணம் பலன்களை செய்யும். அதே போல் அவரோகணம் அதாவது நீச வீட்டை நோக்கி போனால் கடுமையான கஷ்டங்களை தரும்.!! ஆனால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கப் போகிறது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும்.பல வருஷங்களாக முயற்சி செய்த விசயங்களை எளிதில் முடிப்பீர்கள். முன்னேற்றமான வேலை தொழில் சம்பாதித்தியம் அமையும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். பகைமைகள் மாறும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். ராசிக்கு அதிபதி கேந்திர திரிகோணத்தில் வந்தால் நிச்சயமாக நல்ல பலனை தான் செய்வார். பகை வீட்டில் அமரும் குரு கேந்திராதிபதி தோஷத்தை கொடுக்க மாட்டார் சுபகாரியம் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார். பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.சேமிப்புகள் சேரும் மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் நடக்கும். 

பரிகாரம்: 

வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.பிரதோஷ காலங்களில் நந்திக்கு சந்தனம் வாங்கி கொடுப்பது நல்லது.


ராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன? இந்த பெயர்ச்சி எப்படி நிகழும்?