Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Saturday, January 21, 2017

கலப்பின ஜெர்சி பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் ஜெர்சி போன்ற பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம்.

நமது நாட்டு சீதோஷண நிலைக்கு உகந்த மாடுகள் நமது நாட்டு இன மாடுகள்தான். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் ஜெர்சி போன்ற பசுக்களுக்கு நமது சீதோஷ்ணம் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் அவற்றிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை. அதற்கு அடிக்கடி மருந்துகள். ஊசிகள் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஜெர்சி பசுக்கள், காளைகளுடன் இயற்கையான முறையில் இணை சேர்ந்து, இனவிருத்தி செய்வதில்லை. செயற்கை கருவூட்டல் மூலமே இனவிருத்தி நடைபெறுகிறது. இதனால் இதன் பாலும் நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கிறது.

கலப்பின ஜெர்சி பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

நாட்டு மாடுகள் பாலில் நோய்களை உருவாக்கக்கூடிய மூலக்கூறான ஏ1 புரதம் சுத்தமாக இல்லை. மாறாக ஏ2 புரதம் என்ற மனிதனுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மூலக்கூறு இருக்கிறது. அதனால் நாட்டு மாடுப் பால் அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் வெளிநாட்டுப் பசுக்கள், கலப்பின பசுக்களின் பாலில் ஏ1 புரதம் இருப்பதால் இந்த பாலை தொடர்ந்து அருந்தும் போது சர்க்கரை நோய், ஹார்மோன் சமநிலை பாதிப்படைதல் போன்றவை ஏற்படக்கூடும்.

பால் அதிகமாக கறப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த கலப்பின பசுக்களிடம், பால் மிக அதிகமாக அளவில் சுரப்பதற்காக பெண்மைக்கான ஹார்மோன் அதன் மரபணுவில் அதிகம் இருக்கிறது. வெறும் பெண்மைக்கான ஹார்மோன் மட்டுமே அதிகமாக இருப்பதால் இவை பாலியல் செயல்பாடுகளில் மிக மந்தமாகவே செயல்படும். இந்த பால் ஆண்களுக்கு வீரியக் குறைவையும், மந்தமான செயல்பாட்டையும் ஏற்படுத்துகிறது. 

பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்கு, பாலுணர்வு போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இன்று குழந்தை பேறு குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதனாலே தான் மருத்துவர்கள் சமீப காலமாக பாலை சாப்பிடாதீர்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகமாக விளம்பரம் செய்தும் கூட, நம்நாட்டிலும், தமிழகத்திலும் பணக்காரர்கள் ஏராளமான நாட்டு மாடுகளையே வளர்க்கிறார்கள். சாமானிய விவசாயி நாட்டு மாடுகளை கைவிட்டு, வெகு ஆண்டுகளாகிவிட்டது. நாட்டு மாடுகள் இருந்தவரை விவசாயிகள் பொருளாதார சுயசார்பு கொண்டவர்களாகவே இருந்தார்கள்.

எனவே நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை. வீட்டில் வளர்க்க முடியாத நிலை என்றால் கூட, அதிக பணம் செலவானாலும் நாட்டு மாட்டுப் பாலை பயன்படுத்துங்கள். நகரத்தில் வசதியுள்ளவர்கள், பண்ணைகள் அமைத்து கூட்டாக சேர்ந்து இருபது, முப்பது நாட்டு மாடுகள் வாங்கி வளர்க்கலாம். அவற்றின் பால் மற்றும் இதர பொருட்களை தினமும் பயன்படுத்தி, வருமானத்தை பிரித்துக்கொள்ளலாம். இன்றைய இளைஞர்கள் தான் நாட்டினங்கள் அழியாமல் இருக்க தொடர்ந்து போராட வேண்டும்.

Friday, December 30, 2016

BHIM Apps பிம் ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது ?

பணமற்ற பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாரத் இன்டர்பேஸ் பார் மணி ( பிம்) எனற் புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் இந்த ஆப்ஸ், ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு செயல்படும். ஐஓஎஸ் (ஆப்பிள்) தளத்திற்கான இந்த ஆப்ஸ் விரைவில் வெளியிடப்படும். இந்த புதிய ஆப்ஸ் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடன் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதர யுபிஐ மற்றும் பாங்க் கணக்குகளோடு தொடர்பு கொண்டு இந்த ஆப்சை பயன்படுத்தலாம்.

BHIM Apps பிம் ஆப்ஸ்  எப்படி பயன்படுத்துவது
BHIM Apps பிம் ஆப்ஸ்  எப்படி பயன்படுத்துவது

இந்த பிம் ஆப்சை எப்படி பயன்படுத்துவது?

இந்த பிம் ஆப்சை, பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்தபின், உங்களுடைய பாங்க் கணக்கை இதில் பதிவு செய்து அதற்கான யுபிஐ னின் எண்ணை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயன்படுத்துபவரின் மொபைல் எண்தான், பயன்படுத்துபவரின் முகவரியாக இருக்கும். இவ்வாறு ஒருமுறை பதிவு செய்து கொண்ட பின் பிம் ஆப்சைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

பிம் ஆப்சைப் பயன்படுத்தி எப்படி பணத்தைப் பெறுவது?

பயன்படுத்துபவர், தங்களுடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நுகர்வோரிடமிருந்து பணத்தைப் பெறலாம்; அவர்களுக்கு பணத்தை அனுப்பலாம். யுபிஐ தொடர்பு இல்லாத பாங்குகளுக்கும் ஐஎப்எஸ்சி எண்ணைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யலாம்.

இந்த பிம் ஆப்சை ஏற்கும் பாங்குகள் எவை?

அலகாபாத் பாங்க், ஆந்திரா பாங்க், ஆக்சிஸ் பாங்க், பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா பாங்க், கத்தோலிக் சிறியன் பாங்க், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, டிசிபி பாங்க், தேனா பாங்க், பெடரல் பாங்க், எச்டிஎப்சி பாங்க், ஐசிஐசிஐ பாங்க், ஐடிபிஐ பாங்க், ஐடிஎப்சி பாங்க், இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், இந்துஸ் இந்த் பாங்க், கர்நாடகா பாங்க், கரூர் வைஸ்யா பாங்க், கோடக் மகிந்தரா பாங்க், ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் பாங்க், ஆர்பிஎல் பாங்க், சவுத் இந்தியன் பாங்க், ஸ்டாண்டர்டு சார்ட்டடு பாங்க், ஸ்டேட பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் பாங்க், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா பாங்க். இதர விவரங்கள்பயனீட்டாளர் பணபரிவரித்தனை தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மொபல் எண் தவிர வழக்கமான பணபரிவர்த்தன முகவரியையும் உருவாக்கி கொள்ளலாம். கியூஆர் குறியீட்டு மூலம் எளிதாக பண பரிவர்த்தனை செய்யாலாம்.
பிம் ஆப்ஸ் இப்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே செயல்படும். விரைவில் இதர மொழி வசதிகளும் செய்து தரப்படும்.

பிம் ஆப்சை எப்படி டவுன்லோடு செய்யலாம்?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியில் இந்த ஆப்சை டவுன்லோடு செய்ய : BHIM Apps

Tuesday, December 20, 2016

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017: மேஷ ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்?

2017 புத்தாண்டு ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம லக்கின ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்களாகும். மேஷ ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்.

2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும். 

ஆங்கில புத்தாண்டு 2017: மேஷ ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்?
ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

மேஷம் ராசியினருக்கு ஆங்கில புத்தாண்டு எப்படி? 

வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே எதிலும் துணிச்சலும் தான் நினைத்த காரியம் சாதிக்கின்ற எண்ணமும் தான் நினைக்கும் எண்ணப்படி பிறர் நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே.

ஜனவரி - தொழிலில் இடமாற்றம் :

மாதக் கடைசியில் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் உத்தியோகம் சம்பந்தமாக இடமாற்றம் உண்டாகும். 14ந் தேதிக்குப் பிறகு புதிய இடத்தில் பணியில் அமரும் நிலை உண்டாகும். பணியில் கொஞ்சம் மன ஈடுபாடு குறைவாக இருக்கும். வெளியூர் பயணம் காரணமாக செலவுகள் அதிகரிக்கும் சிலர் வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மாதக் கடைசியில் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும்.

மேஷ ராசிக்கான பலன் ஜனவரி மாதம் To டிசம்பர் தெரிந்து கொள்ளலாம் : Click Here

Friday, December 16, 2016

பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு - அரசு தேர்வுத்துறை இயக்ககம்

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2  மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு
தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.மேலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரிவான தேர்வு அட்டவணை பின்வருமாறு:

HSC Public Exam Time Table - March 2017 :

02.03.17 - வியாழன் - தமிழ் முதல் தாள்
03.03.17 - வெள்ளி -  தமிழ் இரண்டாம் தாள்
06.03.17 - திங்கள் - ஆங்கிலம் முதல் தாள்
07.03.17 - செவ்வாய்  -  ஆங்கிலம் இரண்டாம் தாள்
10.03.17 - வெள்ளி - வணிகவியல் /  மனையியல் / புவியியல்
13.03.17 - திங்கள் - வேதியியல் / கனக்குப் பதிவியியல்
17.03.17 - வெள்ளி - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / 
                                    கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ்க் தமிழ்)
21.03.17 - செவ்வாய் - இயற்பியல் / பொருளியல்
24.03.17 - வெள்ளி - தொழில் கல்வி தியரி / அரசியல் அறிவியல் /  செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்
27.03.17 - திங்கள் - கணிதம் / விலங்கியல் /  நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
31.03.17 - வெள்ளி - உயிரியால் / வரலாறு / தாவரவியல் / வணிக கணிதம்

SSLC Public Exam Time Table - March 2017 :

08.03.17 - புதன் - தமிழ் முதல் தாள்
09.03.17 - வியாழன் - தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 - செவ்வாய் - ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 - வியாழன் - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17- திங்கள் - கணிதம்
23.03.17 - வியாழன் - அறிவியல்
28.03.17 - செவ்வாய் - சமூக அறிவியல்
30.03.17 - வியாழன் - மொழி (விருப்பத் தேர்வு)

Tuesday, December 13, 2016

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 - மேஷம் இராசி முதல் மீனம் இராசி வரை பொதுப் பலன்கள் & பரிகாரங்களும்

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

மேஷ இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி விட்டீர்கள். இப்பொழுது சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பிரமாதமாக வாரி வழங்க போகிறார். இதுநாள்வரைபட்ட கஷ்டங்கள் பறந்து ஓடி விடும். 10,11-க்குரிய சனி பகவான், 9-ல் இருப்பதால் உத்தியோகம், தொழில் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பெற்றோர் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டும், உதவியும் கிடைக்கும். வழக்கில் வெற்றி தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இத்தனை நாள் இருந்த அலைச்சல் தீரும். இனி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை உயர்ந்து நிற்க்கும். 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி தொழில் அமோகமாக இருக்கும். 6-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும். ஓரளவு கடன் தொல்லை அகலும். அதேநேரம் புதிய கடன் வாங்கச் செய்யும். ஆகவே கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து வாரி வழங்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் வழங்கி வணங்குங்கள். செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்குங்கள்.

ஸ்ரீ சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.

ரிஷப இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு இது அஷ்டம சனி.அய்யோ சனி 8-ம் இடத்திற்கு வந்து விட்டதே? என்று பயப்பட வேண்டாம். ரிஷப இராசிக்கு சனி யோககாரகன். அஷ்டம சனியாக வந்தாலும் நிச்சயம் கெடுக்க மாட்டான். ரிஷப இராசிக்கு சனி தர்ம-கர்மாதிபதி. அவன் 2-ம் இடத்தை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், குழப்பங்கள் தீரும். திருமணம் தடைபட்டு இருந்தால் இனி வீட்டில் மேள சத்தம்தான். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும். தெய்வஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இழுத்துக்கொண்டு இருந்த வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொத்து-சுகங்கள் தேடி வரும். பல நாட்களாக பிடித்து வந்த நோய், நொடிகள் நீங்கி நலம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8-ம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் துவங்குவீர்கள். தொழிலில் நண்பர்களையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் உஷாராக இருங்கள். காரணம், 7-ம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். ஆனாலும் பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாக்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சனிக்கிழமையில் சனிபகவான் சந்நதியில் எள் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்

மிதுன இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரையில் 6-ம் இடத்தில் இருந்த சனி பகவான், இப்போது 7-ம் இடத்திற்கு வந்திருக்கிறார். உங்கள் இராசிக்கு 9-க்குரிய சனி, 7-ல் வந்திருப்பது நன்மையே தரும். பொதுவாக பாக்கியாதிபதி, சப்தமஸ்தானத்திற்கு வந்தால் எப்பேர்பட்ட பிரச்னையாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு. உயர்கல்வி அமையும். அடமானத்தில் இருந்த பொருட்கள் கைக்கு வந்து விடும். புதிய வாகனம் வாங்கக்கூடிய சாதகமான நேரம் இது. ஆனாலும், ஜென்ம இராசியை சனி நோக்குவதால் அலைச்சல் அதிகரிக்கும். காரணம், தொழில், வேலை என்று புதிதாக அமைத்து தந்துவிடுவார் சனிபகவான். அதனால் அப்படிதான் இருக்கும். அதோடு சற்று டென்ஷனும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக குடும்பத்தினர் கேட்டு வந்ததை வாங்கி தரும் யோகம் வந்து விட்டதால் அதை பூர்த்தி செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் மனைவியால் நன்மை அடைவார்கள். பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை படைப்பீர்கள்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
**************

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 - மேஷம்  இராசி முதல் மீனம் இராசி வரை பொதுப் பலன்கள் &  பரிகாரங்களும்  விரிவாக பார்க்க வாருங்கள் :  சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017

Monday, December 12, 2016

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்

திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவில் நாள்தோறும் காலையில் உமையாளுடன் சந்திரசேகரரும், மாலையில் பஞ்ச மூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் வீதிஉலா வந்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள்
5-ம் நாள் இரவு வெள்ளி ரி‌ஷப வாகனத்திலும், 6-ம் நாள் வெள்ளித் தேரிலும், 7-ம் நாள் மகா ரதத்திலும் அருணாசலேஸ்வரர் அபித குஜாம்பாளுடன் பக்தர்கள் வெள்ளத்தில் எழுந்தருளினார். மகாரதம் உள்பட 5 தேர்களையும் பக்தர்கள் மாட வீதிகளில் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தியுடன் முழங்கிய லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவில் தேர்கள் அசைந்தபடி பவனி வந்தன.

தீப விழாவின் உச்சகட்டமாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.


Sunday, December 11, 2016

மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன் வித்தியாசத்தில் தொடரை வென்றது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 631 ரன் குவித்தது. கேப்டன் வீராட்கோலி இரட்டை சதமும் (235 ரன்), முரளிவிஜய் (136), ஜெயந்த்யாதவ் (104) ஆகியோர் சதமும் அடித்தனர். அதில் ரஷீத் 4 விக்கெட் கைப்பற்றினார்.

மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது
மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது
231 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் என்ற மோசமான நிலையில் இருந்தது. ஜோரூட் 77 ரன் எடுத்தார். பேர்ஸ்டோவ் 50 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இன்று (திங்கட்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 49 ரன் தேவை. கைவசம் 4 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. இங்கிலாந்தின் எஞ்சிய 4 விக்கெட்டை எளிதில் கைப்பற்றினால் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணி பந்துவீச்சை தொடர்ந்தது.

அஸ்வினின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி தொடர்ந்து திணறியது.

நன்றாக ஆடி வந்த போஸ்டோவ் 51 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதை தொடர்ந்து வோக்ஸ் 107, ஆதில் ரஷித் (2), ஆண்டர்சன் (2) ஆகியோரின் விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றி முத்திரை பதித்தார்.

இங்கிலாந்து அணி 55.3 ஓவர்களில் 195 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் 55 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்ட் முதல் இன்னிங்சில் அவர் 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். ஜடேஜாவுக்கு 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஜெயந்த் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த வெற்றி மூலம் வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 246 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்தியா தொடரை வென்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.