Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Friday, May 29, 2015

பட்டதாரி மாணவர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி – வழங்குகிறது வேளச்சேரி பயிலகம்

சென்னை: சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கவுள்ளது. ஜாவா, டாட் நெட், ஆரக்கிள், வெப் டிசைனிங், சாப்ட்வேர் டெஸ்டிங் ஆகிய 24க்கும் அதிகமான பயிற்சிகள் பயிலகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளைப் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் வழங்கி வருகிறார்கள்.

Free Coaching Class for Students
Free Coaching Class for Students


வரும் ஆண்டு முதல் ஏழை பட்டதாரிகளும் பெற்று பயன் பெறும் வகையில் முற்றிலும் இலவசமாக இப்பயிற்சிகளைக் கொடுக்கப் பயிலகம் பயிற்சி நிறுவனம் முன்வந்துள்ளது. இப்பயிற்சிகளுக்கு அனுமதிக் கட்டணம், பதிவுக் கட்டணம் என்பன போன்ற எந்த மறைமுகக் கட்டணங்களும் கிடையாது. தகுதி: பயிற்சிகளில் இணைந்து பயன் பெறும் மாணவர் ஏதாவது ஒரு துறையில் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். ஏழ்மை நிலையில் இருப்பவராக இருக்க வேண்டும். இவற்றைத் தவிர வேறெந்த நிபந்தனைகளும் இல்லை. 

பதிவு: இப்பயிற்சிகளுக்கு முன்பதிவை http://goo.gl/jrUpW5 என்னும் இணையத்தளத்தில் செய்யலாம். அல்லது 8883775533 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 

பயிற்சி மைய முகவரி: 
பயிலகம், 67/4 இ, 
விஜய நகர் 3ஆவது குறுக்குத் தெரு,
வேளச்சேரி,
சென்னை 600042.

Thursday, May 28, 2015

இ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி?

ஆதார் அட்டை இந்திய அரசால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுகிறது.
ஒவ்வொரு தனி நபரும் ஒரே ஒரு முறை பதிவு செய்து கொண்டால் போதுமானது. இந்த பதிவு இலவசமாகும்.
இப்போது, எளிதாக இணையத்தில் ஆதார் அட்டை பதிவிறக்க முடியும் மற்றும் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. இருப்பினும், இ ஆதார் அட்டையை பதிவிறக்க ஆதார் அட்டை விண்ணப்பம் ஒப்புதல் பெற்றிருத்தல் வேண்டும்

ஆதார் அட்டையை பதிவிறக்க தேவையானவை

1. பதிவு ஐடி / ஆதார் எண்
2. ஏற்றுகொள்ளல் ரசீதில் (acknowledgement slip) உள்ள படி
3. முழுப் பெயர்
4. அஞ்சல் குறியீடு எண்
5. பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்
இ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி
இ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி
ஆதார் கடிதம் மற்றும் அட்டை
மேலும் ஆதார் கடிதம் மற்றும் ஆதார் அட்டை கூட ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதற்கு தேவையானவை ஆதார் அட்டை பதிவு செய்த பதிவு எண், தேதி மற்றும் நேரம் அல்லது ஆதார் அட்டை எண். இ-ஆதார் அட்டை பதிவிறக்குவது எப்படி என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்
செயல்பாடு 1:
முதலில் ஆதார் அமைப்பின் இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். இதை கிளிக் செய்யவேண்டும். Click here  பின்பு 14 இலக்க ஆதார் பதிவு எண்ணை உள்ளிடவும், ஆதார் ஏற்றுகொள்ளல் ரசீதில் உள்ள 14இலக்க தேதி, நேரம் குறித்த எண்ணை உள்ளிடவும். ஆதார் அட்டைக்கு தேவையான விவரங்கள் அதாவது பதிவு எண், தேதி, நேரம், பெயர், பின்கோடு மற்றும் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்ச்சா(captcha)வை பூர்த்தி செய்யவும்.
செயல்பாடு 2:
கொடுக்கபட்ட தரவுகள் சரியாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு OTP(ஒரு முறை கடவுச்சொல்) கிடைக்கப்படும்.அதை உரைபெட்டியில் உள்ளிடவும்.
செயல்பாடு 3:
OTP (ஒரு முறை கடவுச்சொல்) உள்ளிடப்பட்டதும் ஆதார் அட்டையை பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டை அல்லது ஆதார் அட்டைக்கு பதிலாக பயன்படுத்தும் கடிதத்தை கொண்ட PDF கோப்பை பதிவிறக்க கேட்கும்.

Monday, May 25, 2015

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைச்சாச்சா? இல்லேன்னா வோட்டர் லிஸ்டுலேயிருந்தே பெயர் நீக்கம்?


ஆதார் எண்ணை இணைச்சாச்சா? இல்லேன்னா வோட்டர் லிஸ்டுலேயிருந்தே பெயர் நீக்கம்!?

வாக்காளரின் விவரங்களை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தமிழம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, வாக்காளர்களின் ஆதார் எண், செல்லிடைப் பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை பெறப்பட்டு, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும். ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் அதே நேரத்தில், அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருந்தால் பெயரை நீக்குவது, இடம் மாறிய விவரத்தை தெரிவிப்பது, பெயர் சேர்ப்பது, இறந்தவர் பெயரை நீக்குவது போன்ற திருத்தங்களையும் செய்து கொள்ளலாம்.



இதன் பொருட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வந்து விவரங்களை சேர்த்துள்ளனர். மேலும், ஏப்ரல் 12, 26 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களையும் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. இறுதியாக 24-ந் தேதி (இன்று) சிறப்பு முகாம் நடத்தியது

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இல்லம் முன்பு மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் சார்பில் நோட்டீசு ஓட்டப்பட்டு வருகிறது. அந்த நோட்டீசில்,”வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் வீட்டில் விபரம் சேகரிக்க வந்தபோது தங்களுடைய வீடு பூட்டப்பட்டு இருந்தது. குடியிருக்கவில்லை என்று தகவல் தரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, இந்த அறிவிப்பை கண்டவுடன் தாங்களாகவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அல்லது மாநகராட்சி பகுதி அலுவலகம்/ மண்டல அலுவலகத்தில் தங்களது ஆதார் எண், செல்போன் எண், இ–மெயில் முகவரியை எழுத்துபூர்வமாக தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் தாங்கள் குடியிருக்கவில்லை என கருதி தங்களுடைய வாக்காளர் பதிவினை நீக்கம் செய்ய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reference : http://electoralsearch.in/

Friday, May 22, 2015

பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் எப்படி? மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ

வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்காக, இரு காப்பீட்டுத் திட்டங்களை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டங்களை பயன்படுத்துவது எப்படி, பலன் பெறுவது எப்படி என்ற, குழப்பம் பொதுமக்களிடம் நிலவுகிறது.
*ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், அதற்கேற்ப காப்பீடு செய்ய வேண்டுமா?

*இரு காப்பீட்டுத் திட்டங்களிலும் இணைய முடியுமா என, பல சந்தேகங்கள் உள்ளன.

இதற்கு, விளக்கம் அளித்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, விபத்து காப்பீட்டு பாலிசி, பிரதமர் வாழ்க்கை ஒளி காப்பீட்டுத் திட்டம் என, இரு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.


வங்கியில் கணக்கு வைத்துள்ள, 17 முதல், 70 வயதானவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.  ஆண்டுக்கு, 12 ரூபாய் பிரீமியத் தொகை. காப்பீடுசெய்த நாளில் இருந்து, 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இக் காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீட்டுக் காலத்தில், விபத்து ஏற்பட்டு, உடல் காயம் ஏற்பட்டால், ஒரு லட்சம் முதல், 2 லட்சம் ரூபாய், இழப்பீடு கோரலாம். மரணம் நிகழ்ந்தால், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும். பிரீமியத் தொகையான, 12 ரூபாய், வங்கிக் கணக்கில் இருந்து ஆண்டு தோறும் பிடித்தம் செய்யப்படும். பல வங்கிக் கணக்குகள், ஒருவருக்கு இருந்தால், பல காப்பீட்டு பாலிசிகளை எடுக்க முடியாது. எத்தனை வங்கிக் கணக்குகள் இருந்தாலும், ஒருவருக்கு, ஒரு பாலிசி தான் வழங்கப்படும்.காப்பீட்டுக் காலம் முடிவதற்குள், வங்கிக் கணக்கை ரத்து செய்தால், காப்பீட்டுத் தொகை திருப்பி அளிக்கப்படாது.


வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தான் இத்திட்டமும் பொருந்தும். இதற்கான, ஆண்டு பிரீமியத் தொகை, 330 ரூபாய். பிரீமியத் தொகை, வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். வயது வரம்பு, 18 முதல் 50 வயது வரை. இத்திட்டத்திலும், ஒருவருக்கு, ஒரு பாலிசி தான் வழங்கப்படும். ஆனால், விபத்து காப்பீடு மற்றும் வாழ்க்கை ஒளி காப்பீடு இரண்டையும், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் எடுக்க முடியும்.

Prime Minister Dedicates Life & Accidental Insurance Scheme
Prime Minister Dedicates Life & Accidental Insurance Scheme


இழப்பீட்டுத் தொகை :

விபத்துக் காப்பீட்டில் இருந்து இத்திட்டம் மாறுபட்டது. விபத்துக் காப்பீட்டில், விபத்தால் ஏற்படும் இழப்பு, மரணத்துக்கு மட்டுமே, இழப்பீடு அளிக்கப்படும். வாழ்க்கை ஒளி காப்பீட்டுத் திட்டத்தில், விபத்து மற்றும் இயற்கை
மரணத்துக்கும், இழப்பீடு அளிக்கப்படும். இழப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய்.இத்திட்டத்திலும், வங்கிக் கணக்கை பாதியில் ரத்து செய்தால், பிரீமியத் தொகை திருப்பித் தரப்படாது.

இழப்பீடு பெறுவது எப்படி?

விபத்தில் படுகாயமோ, மரணமோ நிகழ்ந்தால், அதற்கான முதல் தகவல் அறிக்கை, பாலிசி எண், வங்கிக் கணக்கு எண்ஆகியவற்றை, வங்கியில் செலுத்தி, இழப்பீடு கோரலாம்.இதேபோல், இயற்கை மரணம் அடைபவர்களுக்கு, மரண சான்றிதழ் அளித்து, இழப்பீடு பெறலாம்.

முதலீடு அல்ல:


காப்பீடு என்பது, பொதுவாக முதலீடாக கருதப்படுகிறது. அதனால், வருமான வரி விலக்கு உண்டு என கருதுகின்றனர். ஆனால், இந்த இரு காப்பீட்டுத் திட்டங்களும், முதலீடு அல்ல; சமூக பாதுகாப்புத் திட்டங்கள். ஒரு வகையான, மருத்துவக் காப்பீடாகவே கருத வேண்டும்.விபத்துகளும், புதுவகையான நோய்களும் தொடர்ந்து அதிகரித்து வரும், இந்த காலகட்டத்தில், இவ்விரு காப்பீட்டுத் திட்டங்களும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு, மிக அவசியம்இவ்வாறு, அவர் கூறினார்.

Wednesday, May 20, 2015

ஸ்டேட் பேங்கின் SBI Anywhere and Quick Apps in Android Mobiles

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கியான ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை மொபைல் மூலமாக பெற்றிட வழிவகை செய்திருக்கிறது.

1. State Bank Anywhere App:

வங்கி பணயிருப்பு, சிறு பண அறிக்கை, பணப்பரிமாற்றம், அதே மற்றும் வேறு வங்கிகளுக்குள்ளான பண பரிமாற்றம், வைப்புத்தொகை பராமரித்தல், பண புத்தகம் கோருதல், மொபைல் மற்றும்  டி.டீ.எச் ரீச்சார்ஜ் போன்ற வசதிகளை பெற்றிட இயலும். இது இணையம் மூலமாக இயங்கும்.

SBI Bank Anywhere App
SBI Bank Anywhere App


இந்த செயலியை பதிவிறக்கிக்கொள்ள:

State Bank SBI Anywhere App: https://goo.gl/nOhcRV


2. SBI Quick App:

வங்கி இருப்புத் தொகை, சிறு பண அறிக்கை, பண அட்டையை முடக்குதல் போன்ற சேவைகளை இணைய வசதி இல்லாமலே குறுந்தகவல் மற்றும் தவறிய அழைப்பின் மூலமாக பெற இயலும்.

SBI Quick Mobile App
SBI Quick Mobile App


இந்த செயலியை பதிவிறக்கிக்கொள்ள:

State Bank SBI Quick App : https://goo.gl/pamA0n



3. State Bank Holiday calender App:

வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களில் வங்கி சேவையை பயன்படுத்திக்கொள்ள எண்ணுவர் ஆனால் வங்கி வேலை நாளா அல்லது விடுப்பு நாளா என்ற குழப்பமிருக்கும். இந்த சிரமத்தை போக்கவே SBI வங்கி  வேலை நாள் மற்றும் விடுப்பு நாட்காட்டியை அறிந்துகொள்ள உதவும் செயலி இது.

இந்த செயலியை பதிவிறக்கிக்கொள்ள:

State Bank Holidays Calender App: https://goo.gl/1zWc2U



பயனுள்ள தகவல்களை பெற உடனே  http://velloreinformationcenter.blogspot.in/ என்ற இணைப்பிற்கு சென்று விடுங்களேன்.

தமிழகம், புதுவையில் நாளை 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் வியாழக்கிழமை (மே 21) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இணையதளங்களில் இலவசமாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பம்:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம். மே 22 முதல் 27 வரை மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம் மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும்.

தாற்காலிகச் சான்றிதழ்:

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள் ளலாம்.  

மாணவர்கள் ஜூன் 4-ஆம் தேதி முதல் இந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்
10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு


இணையதளத்தில்... 
சிறப்பு துணைத் தேர்வு  பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது. 

Monday, May 18, 2015

How to Prepare of TNPSC Exam with Best TNPSC Coaching Academy Center in Chennai

TNPSC exams are said to be highly anticipated by the youth of Tamil Nadu, hoping to secure prestigious government job especially in public services. There is a need for the aspiring candidates to have a brief background in regards to TNPSC board the exams that are conducted, before trying to apply for it or choosing best tnpsc study center in chennai.


Each year, lakh of youths in Tamil Nadu are said to await circulars which announce TNPSC exam notifications. The TNPSC was said to be founded by the British in the year 19
best tnpsc coaching center in chennai
best tnpsc coaching academy in chennai
23 and is currently the emerging government body that heads public works and welfare of the state of Tamil Nadu. Previously, it was referred to as Madras Service Commission and is said to have the distinction of the very first state commissions to be established in the country.

This commission is responsible to conduct examinations for recruiting eligible candidates in public service positions throughout the state. To achieve this, more than 170 examinations are organized by this board as part of the yearly recruitment drive to fill up various positions, which include state, subordinate and ministerial service positions. Candidates can easily find TNPSC books for different positions both online and offline to study.

Circulars in regards to the TNPSC examination notifications are sent by the commission at regular intervals through publication journals and official website for interested candidates to go through. Also there are numerous recommended TNPSC books, which the candidates should avail for preparing for the exam. The circulars get tracked and followed religiously, especially by those who plan to go for the coveting career in IAS.

best tnpsc coaching center in chennai
tnpsc study center in chennai


Like with the IAS Services, notifications in regards to TNPSC exams are followed fervently by youth who plan to dedicate their lives towards state public services. The positions are said to be highly coveted, since they belong to category of the highest paid state public service jobs. It is for this reason, candidates in huge numbers from all over the state try to appear for this examination and try to avail tnpsc coaching in chennai  that can help them to accept the challenge and to be confident.

Understanding the Exam Patterns with Best TNPSC Coaching Center in Chennai:

For entering the public service roles that are conducted by TNPSC board, requires the candidates to qualify three test levels, with the first being written tests in two rounds and an oral test, all of which are to be successfully qualified.

The examination announcements typically are monitored for four major groups of positions. With lower being the group number, the higher is the position and rank.

Group 1: It includes IAS officer and high ranking positions, with popular roles being DSPs, Deputy Collectors, Commercial Tax Officers, Deputy and District Registrars, Divisional Fire Officers, District Employment officers and Asst. Director for rural development project.

Group 2:  It includes lower ranked, but highly sought positions like Municipal Commissioners, Dy. Commercial tax officers, asst. inspects. Sub registrars and the like.

Group 3 & 4: They are the lowest in ranks and cover mostly skill based positions like stenographers, typists, translators, along with other administrative roles.

Going through the tnpsc coaching in chennai can help the individual to know about the same in details.

Conclusion:

Qualifying the TNPSC exam is sure to provide the individual with a coveted position that he/she is sure to enjoy. 

உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா?

கோடை வெயில் சுட்டெரிப்பது ஒரு புறம் என்றால், அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றொரு புறம் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும், மின் சிக்கனத்தை கடைப்பிடித்தால், ஆண்டுதோறும் இப்படி புலம்ப வேண்டியதில்லை.

எதற்கெடுத்தாலும் அரசை குற்றம் சொல்லிக் கொண்டே இருக்காமல், நம்மால் முடிந்ததை செய்தாலே, பாதி பிரச்னை தீர்ந்து விடும்.
மின் வெட்டு பிரச்னைக்கு முக்கிய காரணம், மின் பயன்பாடு அதிகரித்திருப்பது தான். முன்பெல்லாம், பணக்காரர்கள் வீட்டில் தான், 'ஏசி'யும், குளிர்சாதனப் பெட்டியும் இருக்கும். இப்போது, பெரும்பாலான வீடுகளில் உள்ளன. விளைவு, மின்சார பயன்பாடு அதிகரித்து விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் செலுத்திய மின் கட்டணத்துக்கும், இப்போது செலுத்தும் கட்டணத்துக்கும், பெரிய அளவில் வேறுபாடு இருக்கும். கட்டணம் அதிகரித்து விட்டது என்று சொன்னால் அது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். நாம், மின் பயன்பாட்டை அதிகரித்து விட்டோம் என்பது தான் உண்மை. அதற்காக, இவையெல்லாம் இல்லாமல், வாழ முடியுமா என்ற கேள்வி எழும். முடியாது தான். அதேசமயம், நம் வீட்டின் மின்நுகர்வையும் குறைக்க வேண்டும். அதற்கு, சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்.

பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதன பெட்டிகளை, மெகா சைஸ் குப்பைத் தொட்டியாகத் தான் பயன்படுத்துகின்றனர். கெட்டுப் போகும் பொருட்களை, ஓரிரு நாட்கள் வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் அது. ஆனால், ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு தயிர், பால், குளிர்பானம் மற்றும் இட்லி மாவு என வைப்பதுடன், காய்கறிகள், சாக்லெட், மருந்து, பூ என எல்லாமே குளிர்சாதன பெட்டியை ஆக்கிரமித்துள்ளது. சட்னியும், இட்லி மாவும் தவிர்க்க முடியாதது. காய்கறி மற்றும் பாலை அன்றாடம் வாங்குவது நல்லது.
தயிரை தினமும் உறை ஊற்றலாம். வாரத்தில் ஒரு நாள், பிரிஜ்ஜை சுத்தம் செய்யுங்கள். குறிப்பாக, பிரீசரில் உள்ள ஐஸ், முற்றிலும் கரைக்கப்பட வேண்டும். அடுத்து, பொருட்கள் வைக்கும் போது, பிரிஜ்க்கு என உருவாக்கப்பட்ட டப்பாக்களில் வையுங்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் மெட்டல் பாக்ஸ்களில் வைக்க வேண்டாம். இதன் மூலம், 10 சதவீதம் பிரிஜ்ஜின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. அதேபோன்று குளிர் குடிநீருக்கு மண்பானை வாங்குங்கள்.

உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா


அடுத்தது, 'ஏசி!' இதன் பில்டர்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில், கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். அதிலுள்ள பேனிலும், தூசி அதிகம் படிந்து இருக்கும். குறிப்பாக, குளிர்காலத்தில் பயன்பாடின்றி வைத்து விட்டு, வெயில் துவங்கியதும், 'ஏசி'யை இயக்கும் போது, அதன் செயல்பாடுகளில், 40 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. இதனால், கோடை துவங்கும் முன், 'ஏசி' மெக்கானிக்கை வரவழைத்து, சுத்தம் செய்வது அவசியம்.
அடுத்து, மின் விளக்குகள்! சி.எப்.எல்., அல்லது அதை விட குறைந்த மின்சாரம் பயன்படுத்தக்கூடிய, எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்தலாம். இதனால், டியூப் லைட்டுக்கு பயன்படுத்திய மின்சாரத்தில், நான்கில் ஒரு பங்கு தான் செலவாகும்.

அதேபோன்று, பழைய பிக்சர் டியூப், 'டிவி'க்கள், மின்சாரம் அதிகம் எடுக்கக்கூடியவை. எல்.இ.டி,, மற்றும் எல்.சி.டி., 'டிவி'கள் என்றால், பாதி மின்சாரம் மட்டுமே பயன்படும்.

இதையெல்லாம் செய்தாலும், நம் வீட்டில் எவ்வளவு மின்சாரம் சேமித்து விட முடியும் என்ற அவநம்பிக்கை எழுகிறதா?
முதல் நாள் மாலை, 5:00 மணிக்கு, உங்கள் வீட்டு மின்சார மீட்டரின் ரீடிங்கை குறித்துக் கொள்ளுங்கள். அதன்பின், வீட்டில் எந்தெந்த விளக்கை எப்போது போடுகிறோம், அணைக்கிறோம் என்பதை குறிக்கத் துவங்குங்கள். மறுநாள் மாலை, 5:00 மணி வரை, எவ்வளவு யூனிட் வந்துள்ளது என, குறித்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, பிரிஜ்ஜில் உள்ள தேவையற்ற பொருட்களை வெளியில் எடுத்து, சுத்தம் செய்யுங்கள். 'ஏசி'யையும் சுத்தம் செய்யுங்கள். டியூப் லைட் இருக்கும் அறைகளில் எல்லாம், எல்.இ.டி., விளக்குகளை பொருத்துங்கள்.
அதன்பின், மாலை, 5:00 மணிக்கு, மீண்டும் ரீடிங்கை குறித்துக் கொள்ளுங்கள். முன்பு செய்தது போலவே, எந்தெந்த விளக்குகளை எப்போது ஆன் செய்கிறோம், ஆப் செய்கிறோம் என மீண்டும் குறியுங்கள். மறுநாள் மாலை, 5:00 மணிக்கு ரீடிங்கை பாருங்கள். 20 முதல் 30 சதவீத மின் நுகர்வு குறைந்திருக்கும்.

ஒரு நாளில் இந்த அளவு எனும் போது, கட்டணத்தில் எவ்வளவு குறையும் என நினைத்துப் பாருங்கள். நம் வீட்டுக் கட்டணம் குறைவது மட்டுமின்றி, நாட்டுக்கும் நம்மால் நல்லது நடப்பதை உணருங்கள்.
நினைவில் கொள்ளுங்கள்... ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பது, இரண்டு யூனிட் மின்சாரம் தயாரிப்பதற்கு சமம்.

மேலும் விவரங்கள் முழுமையான அறிய http://www.velloreinformation.in or 
http://bit.ly/1AfsIlJ என்ற இணையதளத்தை பார்க்கவும்

Saturday, May 16, 2015

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்:

நேரடி விண்ணப்ப விநியோகம் இல்லை:

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்சி.), பி.டெக். உணவுத் தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய மூன்று படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எத்தனை இடங்கள்? 

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 280 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 என மொத்தம் 340 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்பு
கால்நடை மருத்துவப் படிப்பு


இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மே 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கல்லூரி குறித்த விவரம், கூடுதல் விவரங்கள் அனைத்தையும் அந்த இணையதளத்தின் மூலமாகவே மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 4-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். முதல்கட்டமாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து, புகைப்படம், சான்றொப்பம் பெறப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து, தபால் மூலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.

ஜூன் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டும்.

இதுகுறித்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழு அலுவலர் டாக்டர் திருநாவுக்கரசு கூறியது:

கடந்த ஆண்டு நேரடி விண்ணப்ப விநியோகம், இணையதள விண்ணப்பம் இரண்டு முறைகளையும் கையாண்டோம். இந்த ஆண்டு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 15,500 பேரும், இதர படிப்புகளுக்கு 2,700 பேரும் என மொத்தம் 18,200 பேர் விண்ணப்பித்தனர்.
இந்த ஆண்டு அதைக் காட்டிலும் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேலும் விவரங்கள் முழுமையான அறிய http://www.tanuvas.ac.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.


Tuesday, May 12, 2015

இனி ரீசார்ஜ் பிசினஸ் தொடங்குவது வெரி ஈசி

இனி ரீசார்ஜ் பிசினஸ் தொடங்குவது வெரி ஈசி.

நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதனுடன் சேர்த்து இனி ரீ சார்ஜ் தொழிலும் செய்யலாம். இனி ஒவ்வொரு நெட்வொர்க் கும் தனி தனி மொபைல் வாங்க தேவை இல்லை. Distributor களை தேடி அலைய தேவை இல்லை. பத்தே நிமிடங்கள் போதும் நீங்கள் ரீ சார்ஜ் பிசினஸ் தொடங்கி உங்கள் வருமானத்தை மேலும் பெருக்கி கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங்களது மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்யவும்.

mobile topup business
Mobile Recharge Business


மற்றவர்கள் தயவு செய்து பதிவு செய்ய வேண்டாம்.

மேலும் விவரங்கள் முழுமையான அறிய http://velloreinformationcenter.blogspot.in/2015/05/blog-post.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, May 11, 2015

அரசு கல்லூரிகளில் 66 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது

66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 66 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Thiruvalluvar University
Thiruvalluvar University


விளம்பர எண்: 426-432/26/04/2015

தேதி: 26-04-2015


பணி: உதவி பேராசிரியர்


துறைவாரியான காலியிடங்கள் விவரம்:



1. தமிழ் - 13
2. ஆங்கிலம் - 18
3. கணிதம் - 11
4. இயற்பியல் - 02
5. கணினி அறிவியல் - 11
6. வணிகவியல் - 10
7. சந்தையியல் நிர்வாகம் - 01

சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6000.

தகுதி: தமிழ், சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் மற்றும் NET அல்லது SLET, SET, JRF, Ph.D முடித்திருக்க வேண்டும்.

பணியிடம்: வேலூர், தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.thiruvalluvaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.