Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Friday, August 21, 2015

மாணவர்களுக்கு கல்விஉதவிதொகை வழங்க புதிய இணையதளம்

மாணவர்களுக்கு கல்விஉதவிதொகை வழங்க புதிய இணையதளம் : 

மத்திய நிதி அமைச்சகம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கி யுள்ளது. http://www.vidyalakshmi.co.in என்ற பெயரிலான இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் தங்களை ஒருங் கிணைத்துக் கொண்டுள்ளன.

மாணவர்களுக்கு கல்விஉதவிதொகை வழங்க புதிய இணையதளம்
மாணவர்களுக்கு கல்விஉதவிதொகை வழங்க புதிய இணையதளம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யலட்சுமி எனும் இணையதளம் தொடங்கப்பட்டது. கல்விக் கடனை எதிர்நோக்கியிருக்கும் மாணவர் களின் நலனுக்காக இந்த இணைய தளம் தொடங்கப்பட் டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இணையதளத்தை உருவாக்கி இதை நிர்வகிக்கும் பணியை என்எஸ்டிஎல் மேற் கொள்ளும். நிதி அமைச்சகம், உயர் கல்வித்துறை, மத்திய மனித வளத்துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி இந்த இணையதளம் நிர்வகிக்கப் படும். நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் மாணவர் களுக்கு தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் கல்விக் கடன், கல்வி உதவித் தொகை ஆகியன வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது பிரதம மந்திரியின் வித்யலட்சுமி கார்யகிரம் (பிஎம்விஎல்கே) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்றார்.

இந்த திட்டத்தின் பிரதான நோக்கமே, போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால் தனது மேற்படிப்பை தொடர முடிய வில்லை என்ற நிலை எந்த ஒரு மாணவனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். இந்த இலக்கை எட்டுவதன் முதல் படியாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த இணையதளத்தில் வங்கிகள் கல்விக் கடனுக்கு ஒதுக்கி யுள்ள திட்டங்கள், அது குறித்த தகவல்கள், விண்ணப் பங்கள் மற்றும் அரசு அளிக்கும் கல்வி உதவித் தொகை (ஸ்காலர் ஷிப்) பற்றிய தகவல்கள் அனைத் தும் இடம்பெறும். வித்யலட்சுமி இணைய தளமானது, மாணவர் களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனைத்து தகவல்களும் கிடைக்கும் வகையில் உருவாக் கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர்களது விண்ணப்பங்கள் எந்த கட்ட பரிசீலனையில் உள்ளது என்ற விவரமும் இடம்பெறும்.

இதுவரையில் 13 வங்கிகள் இந்த இணையதளத்தில் சேர பதிவு செய்துள்ளன. அவை அளிக்கும் 22 வகையான கல்விக் கடன் பற்றிய விவரமும் இந்த இணையதளத்தில் உள்ளன. எஸ்பிஐ, ஐடிபிஐ வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் தங்கள் இணையதளத்தை இந்த இணையதளத்துடன் இணைத்துள்ளன. மாணவர்களின் கல்விக் கடன் பரிசீலனை பற்றிய விவரத்தை இந்த வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்தவர்கள் அது எந்த நிலையில் உள்ளது என்ற விவரத்தை இணையதளத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.

இணையதளம் உருவாக்கப் பட்டதால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பயனடைவர் என நிதி அமைச்சகம் நம்புகிறது. மேலும் வங்கிகள் அளிக்கும் கல்விக் கடன் பற்றிய தகவலை ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் அறிந்து பயன்பெற இது உதவும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித் துள்ளது.

Monday, August 17, 2015

அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்க ஒரே இணையதளம் அறிமுகம்

மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை எளிதாக பெறுவதற்காக ஒரே இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு வழங்கும் அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் இந்த இணையதளம் ஒன்றிலேயே விண்ணப்பிக்க முடியும். இந்த புதிய இணையதளம் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.


மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை எளிதாக பெறுவதற்காக ஒரே இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது
மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை எளிதாக பெறுவதற்காக ஒரே இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது

புதிய இணையதம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும், மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விளம்பரப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.


மத்திய அரசின் உயர்கல்வித் துறை, சமூகநீதி மேம்பாட்டுத் துறை, பழங்குடியினர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை, சிறுபான்மையினர்நலத் துறை, பள்ளிக் கல்வி- எழுத்தறிவுத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்தக் கல்வி உதவித் தொகைகள் குறித்த நேரத்தில் விரைவாகவும், நேரடியாகவும் மாணவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, தேசிய இ-கல்வி உதவித்தொகை இணையதளத்தை (http//www.sholerships.gov.in) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது. 

இந்தக் கல்வி உதவித்தொகைகளைப் பெற விரும்பும் மாணவர்கள் முதலில், இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களால் இணையத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம், சம்பந்தப்பட்ட அவர்களுடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் சார்பில் முதலில் பரிசீலிக்கப்பட்டு பின்னர் இணையத்தில் இறுதியாக சமர்ப்பிக்கப்படும். மேலும் நாம் அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பதையும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என வசதியும் உள்ளது.