Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label நீங்கள். Show all posts
Showing posts with label நீங்கள். Show all posts

Wednesday, November 30, 2016

மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன? நீங்கள் அறியவேண்டிய 10 விஷயங்கள்?

அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த நாள் முதலே, சிரமத்தில் இருந்த பலருக்கும் கைகொடுத்தது இணையவழி பணப்பரிமாற்றங்கள்தான். இந்த மின்னணு பரிமாற்றங்களை நோக்கி அதிகம் முன்னேறவும், தற்போது அரசு நம்மை அறிவுறுத்தி வருகிறது.

மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன?
மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன?
இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், இ-வாலட்கள் என பலவழிகள் மின்னணுப் பரிமாற்றங்களுக்கு உதவிவருகிறது. பல இ-வாலட்கள் நாம் மொபைலில் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் அவை அனைத்தும் தனியார் சேவைகள். இந்நிலையில் பெரும்பாலோனோர் மத்தியில் அரசு சேவையான யு.பி.ஐ பணப்பரிமாற்றம் பற்றிய ஆர்வம் வந்துள்ளது. எனவே அதுபற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

1. மத்திய அரசின் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் சேவைதான் இந்த யு.பி.ஐ. ஒரு ஸ்மார்ட்போன், ஒரு ஆண்ட்ராய்டு ஆப், உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை வைத்துக் கொண்டே இதில் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.

2. இந்த சேவையை பயன்படுத்த ஏதேனும் ஒரு வங்கியின் யு.பி.ஐ ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் சரி..மற்றொரு வங்கியின் ஆப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

3. இதன் மூலம் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்ப அவரது வங்கி கணக்கு எண், IFSC கோட் என எதுவுமே வேண்டாம். நீங்களும் கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு எண், ஆன்லைன் பேங்கிங் விவரங்கள் போன்ற எதையும் கொடுக்க வேண்டாம்.

4. இதன் மூலம் உடனடியாக ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை அனுப்ப முடியும். நாம் பணம் அனுப்புவதைப் போலவே நீங்கள் மற்றொருவரிடம் இருந்து உடனடியாக நம்மால் பணம் பெறவும்  முடியும்.

5. இதனை பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை பார்ப்போம். முதலில் ஏதேனும் ஒரு வங்கியின் ஆப்பை இன்ஸ்டால் செய்து அதில் உங்கள் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஆப்பை திறந்ததுமே, ஆப் உங்களின் அனுமதியைக் கேட்டுவிட்டு எஸ்.எம்.எஸ் மூலமாக உங்கள் போன் எண்ணை உறுதி செய்துகொள்ளும். அதேபோல ஆப்பை பயன்படுத்த பாஸ்வேர்டையும் செட் செய்துகொள்ள வேண்டும்.

6. பிறகு ஆப் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை இதில் இணைத்துக் கொள்ளும். உங்களது போன் எண் ஆனது எந்த வங்கிகளில் எல்லாம் இணைக்கப்பட்டு உள்ளதோ, அந்தக் கணக்குகளை மட்டுமே இது எடுத்துக்கொள்ளும்.

7. கணக்கு விவரங்களை இணைத்தபிறகு விர்ச்சுவல் ஐடி எனப்படும் தனிப்பட்ட ஐடி.,யை உருவாக்கிக் கொள்ளவேண்டும். விர்ச்சுவல் ஐடி எனப்படும் இந்த முகவரிதான் பணம் அனுப்பவும், பெறவும் பயன்படும் முகவரி. இவற்றுடன் வங்கி மூலம் பெறப்பட்ட எம்.பின்னையும்(M-Pin) பதிவு செய்துவிட்டால், உங்கள் யு.பி.ஐ ஆப் பணம் அனுப்பவும், வாங்கவும் தயாராகிவிடும். இந்த ஆப்பில் உங்கள் ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம். இதன் உதவியுடன் ஆதார் எண் மூலமும் பணம் அனுப்ப முடியும்.

8. அதேபோல பிறரிடம் இருந்து பணம் பெற, பணம் பெற வேண்டியவரின் விர்ச்சுவல் முகவரியைக் கொடுத்து, எவ்வளவு பணம் பெற வேண்டும் என்பதனை கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த பணப் பரிவர்த்தனைக்கு ஒருநாள், ஒருவாரம் என நேர அளவும் செட் செய்துகொள்ள முடியும். நீங்கள் பணம் கேட்டு விண்ணப்பித்த உடனேயே, இந்த கோரிக்கை, நீங்கள் பணம் கேட்டு விண்ணப்பித்தவரின் மொபைலுக்கு சென்று விடும். உடனே அவர் தனது எம்-பின்னை கொடுப்பதன் மூலமாக பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும். உடனே உங்கள் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும் என்பது இல்லை. நீங்கள் நிர்ணயித்துள்ள கால அளவுக்குள் அதனை செய்தால் போதும். விர்ச்சுவல் முகவரி தவிர வேறு எதையும் நாம் பகிர்ந்துகொள்வது இல்லை என்பதால் பாதுகாப்பானது.

யு.பி.ஐ பணப்பரிமாற்றம் - நீங்கள் அறியவேண்டிய 10 விஷயங்கள்
9. இதன்மூலம் கடைக்காரர்கள் கூட, தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்திற்கு பதிலாக, இதில் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். ஷாப்பிங் செய்யும் போது கேஷ் ஆன் டெலிவரி போன்றவற்றிலும் இது பயன்படும்.

10. தற்போது இதில் இருக்கும் பெரிய பிரச்னையே, இதில் இருக்கும் தொழில்நுட்ப குறைபாடுகள்தான். ப்ளே ஸ்டோரில் இருக்கும் எந்தவொரு யு.பி.ஐ App-ம் நல்ல ரிவ்யூக்களை பெறவில்லை. இதனை பிராக்டிக்கலாக பயன்படுத்தும் போதும், நிறைய சிக்கல்கள் வருகின்றன. டூயல் சிம் போன்களில் போன் எண்ணை உறுதி செய்வது, வங்கி கணக்குகளை இதில் இணைப்பது போன்றவற்றில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை விரைவாக சரிசெய்தால் மட்டுமே இதன் பயன் அனைவரையும் சென்றடையும். அதேபோல இதில் நிறையப்பேர் இணைந்தால் மட்டுமே இது வெற்றிகரமான முறையாகவும் அமையும்.

Thursday, July 21, 2016

தமிழக சட்டசபையில் 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியவை ?

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று திருத்தப்பட்ட முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்பார்த்ததை போலவே, வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

மேலும், வரி ஏதுமற்ற பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பட்ஜெட்டில், வரி விதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே இது வரியற்ற பட்ஜெட்டாக அமைந்தது.

தமிழ்நாட்டின் கடன் அளவு 2.52 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ஓபிஎஸ் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியவை

தமிழக பட்ஜெட் அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியவை :

7 சம்பள கமிஷன் அறிவிப்பு:

மத்திய அரசின் 7 சம்பள கமிஷன் அறிவிப்புகளை விரைவாக அமல்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என நிதியமைச்சர் தமிழக அரசு சார்பாக உறுதியளித்துள்ளார்.

வறுமை ஒழிப்பு:

நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையில் முக்கியப் பணிகளைச் செய்யத் தமிழ்நாடு அரசு 355.81 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

நகரப்புற வளர்ச்சி:

தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களையும் தாண்டு முக்கியமான நகரங்களில் வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளைச் செய்ய 350 கோடி ரூபாய் நிதித்தொகையை அறிவித்துள்ளது.

டாஸ்மாக் :

தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாகக் கொண்டு வருவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்ன முதல்வர் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடினார் இதனால் தமிழக அரசுக்கு 6,636.08 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின்சார மானியம்:

100 யூனிட் குறைவாக இருக்கும் அனைத்து வீடுகளுக்குத் தமிழக அரசு இலவச மின்சாரம் என்ற திட்டத்தை அறிவித்தது. இதனால் 1,607கோடி ரூபாய் வருவாய் இழப்பு. மின்சாரத் துறைக்கான மானியத்திற்காக 9,007 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சோலார் மின்சாரம்:

அடுத்த ஒரு வருடத்தில் தமிழ்நாட்டில் 20,000 வீடுகளுக்கான மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவிற்கு 420 கோடி ரூபாய் முதலீட்டு புதிய சோலார் மின்சாரத் திட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது

மின்சார துறை :

அடுத்த ஒரு ஆண்டில் அனல் மின்சாரம் 13000 மெகாவாட்டாகவும், சூரிய மின்சாரம் 3000 மெகாவாட்டாகவும் அதிகரிக்கப்படும். 5 ஆண்டுகளில் இதை 18,500 மெகாவாட்டாக உற்பத்தி அதிகரிக்கப்படும். மின் துறைக்கு ரூ.13,856 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

போக்குவரத்துறை:

புதிய பேருந்துகள் வாங்க 125 கோடி ரூபாயும், இத்துறை வளர்ச்சிகளுக்காக 1,295.08 கோடி ரூபாய் நிதியைத் தமிழக ஒதுக்கியுள்ளது. இதனுடன் வருவாய் துறைக்கு 5,600 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளது.

உழவர் மற்றும் விவசாயம்:

உணவு தானிய உற்பத்தி இலக்கு ரூ147 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது, இதனுடன் உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ206 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மருந்துவக் காப்பீடு:

முன் கலைஞர் காப்பீடாக இருந்து தற்போது முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக மாறியுள்ள இந்த மருந்துவக் காப்பீடு திட்டத்திப்கு ரூ 928 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம்:

சென்னையில் பல ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த மெட்ரோ ரயில் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்த நிலையில், 2வது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்தார்

முதலீட்டாளர்கள் மாநாடு :

முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்களிடம் இருந்து இது வரை ரூ.23,500 கோடி முதலீடாக வந்துள்ளன.

ஃபோர்டு ஆராய்ச்சி மையம் :

கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு வாகனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான ஆராய்ச்சி மையத்தைத் துவங்க உள்ளது.

தொழில் துறை :

தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சிக்காக ரூ. 2,104.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைத் துறை :

ரூ. 1541 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இருக்கும் இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலைகள் விரிவாக்கம் செய்யபடும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் :

100 நாள் வேளை திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.7.155 கோடி நிதி ஒதுக்கீடு.

ஊதியக்குழு பரிந்துரைகள் :

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும்.