Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label 10. Show all posts
Showing posts with label 10. Show all posts

Wednesday, November 30, 2016

மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன? நீங்கள் அறியவேண்டிய 10 விஷயங்கள்?

அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த நாள் முதலே, சிரமத்தில் இருந்த பலருக்கும் கைகொடுத்தது இணையவழி பணப்பரிமாற்றங்கள்தான். இந்த மின்னணு பரிமாற்றங்களை நோக்கி அதிகம் முன்னேறவும், தற்போது அரசு நம்மை அறிவுறுத்தி வருகிறது.

மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன?
மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன?
இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், இ-வாலட்கள் என பலவழிகள் மின்னணுப் பரிமாற்றங்களுக்கு உதவிவருகிறது. பல இ-வாலட்கள் நாம் மொபைலில் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் அவை அனைத்தும் தனியார் சேவைகள். இந்நிலையில் பெரும்பாலோனோர் மத்தியில் அரசு சேவையான யு.பி.ஐ பணப்பரிமாற்றம் பற்றிய ஆர்வம் வந்துள்ளது. எனவே அதுபற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

1. மத்திய அரசின் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் சேவைதான் இந்த யு.பி.ஐ. ஒரு ஸ்மார்ட்போன், ஒரு ஆண்ட்ராய்டு ஆப், உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை வைத்துக் கொண்டே இதில் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.

2. இந்த சேவையை பயன்படுத்த ஏதேனும் ஒரு வங்கியின் யு.பி.ஐ ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் சரி..மற்றொரு வங்கியின் ஆப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

3. இதன் மூலம் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்ப அவரது வங்கி கணக்கு எண், IFSC கோட் என எதுவுமே வேண்டாம். நீங்களும் கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு எண், ஆன்லைன் பேங்கிங் விவரங்கள் போன்ற எதையும் கொடுக்க வேண்டாம்.

4. இதன் மூலம் உடனடியாக ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை அனுப்ப முடியும். நாம் பணம் அனுப்புவதைப் போலவே நீங்கள் மற்றொருவரிடம் இருந்து உடனடியாக நம்மால் பணம் பெறவும்  முடியும்.

5. இதனை பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை பார்ப்போம். முதலில் ஏதேனும் ஒரு வங்கியின் ஆப்பை இன்ஸ்டால் செய்து அதில் உங்கள் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஆப்பை திறந்ததுமே, ஆப் உங்களின் அனுமதியைக் கேட்டுவிட்டு எஸ்.எம்.எஸ் மூலமாக உங்கள் போன் எண்ணை உறுதி செய்துகொள்ளும். அதேபோல ஆப்பை பயன்படுத்த பாஸ்வேர்டையும் செட் செய்துகொள்ள வேண்டும்.

6. பிறகு ஆப் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை இதில் இணைத்துக் கொள்ளும். உங்களது போன் எண் ஆனது எந்த வங்கிகளில் எல்லாம் இணைக்கப்பட்டு உள்ளதோ, அந்தக் கணக்குகளை மட்டுமே இது எடுத்துக்கொள்ளும்.

7. கணக்கு விவரங்களை இணைத்தபிறகு விர்ச்சுவல் ஐடி எனப்படும் தனிப்பட்ட ஐடி.,யை உருவாக்கிக் கொள்ளவேண்டும். விர்ச்சுவல் ஐடி எனப்படும் இந்த முகவரிதான் பணம் அனுப்பவும், பெறவும் பயன்படும் முகவரி. இவற்றுடன் வங்கி மூலம் பெறப்பட்ட எம்.பின்னையும்(M-Pin) பதிவு செய்துவிட்டால், உங்கள் யு.பி.ஐ ஆப் பணம் அனுப்பவும், வாங்கவும் தயாராகிவிடும். இந்த ஆப்பில் உங்கள் ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம். இதன் உதவியுடன் ஆதார் எண் மூலமும் பணம் அனுப்ப முடியும்.

8. அதேபோல பிறரிடம் இருந்து பணம் பெற, பணம் பெற வேண்டியவரின் விர்ச்சுவல் முகவரியைக் கொடுத்து, எவ்வளவு பணம் பெற வேண்டும் என்பதனை கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த பணப் பரிவர்த்தனைக்கு ஒருநாள், ஒருவாரம் என நேர அளவும் செட் செய்துகொள்ள முடியும். நீங்கள் பணம் கேட்டு விண்ணப்பித்த உடனேயே, இந்த கோரிக்கை, நீங்கள் பணம் கேட்டு விண்ணப்பித்தவரின் மொபைலுக்கு சென்று விடும். உடனே அவர் தனது எம்-பின்னை கொடுப்பதன் மூலமாக பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும். உடனே உங்கள் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும் என்பது இல்லை. நீங்கள் நிர்ணயித்துள்ள கால அளவுக்குள் அதனை செய்தால் போதும். விர்ச்சுவல் முகவரி தவிர வேறு எதையும் நாம் பகிர்ந்துகொள்வது இல்லை என்பதால் பாதுகாப்பானது.

யு.பி.ஐ பணப்பரிமாற்றம் - நீங்கள் அறியவேண்டிய 10 விஷயங்கள்
9. இதன்மூலம் கடைக்காரர்கள் கூட, தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்திற்கு பதிலாக, இதில் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். ஷாப்பிங் செய்யும் போது கேஷ் ஆன் டெலிவரி போன்றவற்றிலும் இது பயன்படும்.

10. தற்போது இதில் இருக்கும் பெரிய பிரச்னையே, இதில் இருக்கும் தொழில்நுட்ப குறைபாடுகள்தான். ப்ளே ஸ்டோரில் இருக்கும் எந்தவொரு யு.பி.ஐ App-ம் நல்ல ரிவ்யூக்களை பெறவில்லை. இதனை பிராக்டிக்கலாக பயன்படுத்தும் போதும், நிறைய சிக்கல்கள் வருகின்றன. டூயல் சிம் போன்களில் போன் எண்ணை உறுதி செய்வது, வங்கி கணக்குகளை இதில் இணைப்பது போன்றவற்றில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை விரைவாக சரிசெய்தால் மட்டுமே இதன் பயன் அனைவரையும் சென்றடையும். அதேபோல இதில் நிறையப்பேர் இணைந்தால் மட்டுமே இது வெற்றிகரமான முறையாகவும் அமையும்.

Monday, November 28, 2016

திருமண பொருத்தம் என்றால் என்ன? ஏன் 10 பொருத்தம் அவசியம் பார்க்க வேண்டும்?

திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம். 

திருமண பொருத்தம் என்றால் என்ன?
திருமண பொருத்தம் என்றால் என்ன?
நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள். அதிலும் கூட மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் போன்றவை இல்லற வாழ்க்கையை குறிப்பவை, இவை கண்டிப்பாக பொருந்த வேண்டும் என்று ஆண், பெண் வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படி ஆண், பெண் இராசி, ஜாதகம் பொருந்தி அமைந்தால் தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

இனி, திருமண பொருத்தம் என்றால் என்ன மற்றும் அதன் உண்மை விளக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்.

தினப் பொருத்தம்:

தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

கணப் பொருத்தம்:

குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம் தான் குணப் பொருத்தம். மனைவியாக / கணவனாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

மகேந்திரப் பொருத்தம்:

திருமணம் ஆகப்போகும் ஆண், பெண்ணுக்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்:

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் பெருக பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தமும் கூட ஓர் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

யோனிப் பொருத்தம்:

யோனிப் பொருத்தம் முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது பொருத்தம் தான் யோனிப் பொருத்தம். இந்த பொருத்தம் இருவருக்கும் ஒத்துப் போக வேண்டியது அவசியம்.

ராசிப் பொருத்தம்:

பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு எனப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் சிலர் ஒரே ராசி என்றால் கூட அது உத்தமம் தான். ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் இந்த பொருத்தம் முக்கியம்.

ராசி அதிபதிப் பொருத்தம்:

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். பன்னிரண்டு இராசிக்கும் அதிபதி உண்டு அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையில் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. இதில் ஆண், பெண் இராசிக்கு இடையில் பகை தவிர மற்ற இரண்டு இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.

வசியப் பொருத்தம்:

கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஈர்ப்பு ஏற்படும் கூறப்படுகிறது.

ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம்:

இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

வேதைப் பொருத்தம்:

திருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்ப - துன்பங்கள் எவ்வாறு அமையும், எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த வேதைப் பொருத்தம்.

அப்படி இந்த பொருத்தங்களில் ஏதேனும் சிறுசிறு குறைபாடு அல்லது குளறுபடி இருந்தால், அதை தோஷம் கழித்து சரிசெய்யலாம் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்

Monday, October 24, 2016

பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்? தங்க கடன் பத்திர முதலீடு கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் :

அனைவருக்கும் தீபாவளி போனஸ் கிடைத்திருக்கும். இந்தப் பணத்தை கொண்டு பலரும் தங்கத்தை வாங்கி வைப்பார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND)  விற்பனையை இன்று (அக்டோபர் 24, 2016) தொடங்கி இருக்கிறது. இந்த பாண்டுகளில் நவம்பர் 2, 2016 வரை முதலீடு செய்யலாம்.

பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்?

வழக்கத்தை விட, தீபாவளிக்காக 10 கிராம் தங்க பாண்டு முதலீட்டுக்கு ரூ.500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமம் கூட வாங்கலாம். அதற்கும் இந்த தள்ளுபடி (கிராமுக்கு ரூ.50) கிடைக்கும்.

பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்
பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்
தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்த தங்க கடன் பத்திரங்களை கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக கொடுக்கலாம்.

இந்த தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக கொடுக்க மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாக தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த கோல்டு பாண்டு முதலீடு, இதர தங்கத் திட்ட முதலீடுகளை விட ஏன் சிறந்தது என்பதை பார்ப்போம்.

தங்கத்தில் முதலீடு செய்ய ஆபரணம், தங்க நாணயம், கோல்டு இடிஎஃப் (காகித தங்கம்), கோல்டு சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் என பல வழிகள் உள்ளன.

1. ஆபரணத்தங்கம் வாங்கும் போது செய்கூலி, சேதாரம் இருக்கும். இது கோல்டு பாண்டில் கிடையாது.

2. ஆபரணத் தங்கம், நாணயம் விற்கும் போது சேதாரம், பழைய நகை என்று விலை குறைக்கப்படும். கோல்டு பாண்டுக்கு அப்போதைய தங்கத்தின் விலை குறையாமல் கிடைக்கும்.

3. கோல்டு இடிஎஃப், கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்ட்களில் நுழைவு கட்டணம், நிர்வாகக் கட்டணம் உண்டு. கோல்டு பாண்டு திட்டத்தில் இந்தக் கட்டணங்கள் எதுவும் கிடையாது.

4. கோல்டு பாண்டில் ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.75% வட்டி  கிடைக்கும். ஆபரணம், தங்க நாணயம், கோல்டு இடிஎஃப் (காகித தங்கம்), கோல்டு சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் விலை ஏற்றம் மட்டுமே லாபம்.

5. தங்க முதலீட்டு திட்டங்களில், கோல்டு பாண்டுக்கு மட்டும்தான் மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.

தங்க கடன் பத்திர முதலீடு கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் :

தங்க முதலீடு மூலம் லாபம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக  தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND) முதலீடு இருக்கிறது. இதன் ஐந்தாம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு, தொடங்கி உள்ளது . இதில் செப்டம்பர் 9 வரை முதலீடு செய்யலாம்.

தங்க கடன் பத்திர முதலீடு கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

அதில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான 10 முக்கிய காரணங்களை பார்ப்போம்.

1. இப்போது ஒரு கிராம் மதிப்புள்ள தங்க கடன் பத்திரத்தில் கூட முதலீடு செய்யலாம். ரூ. 3150 (24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை) இருந்தால் முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும்.  தேவைக்கு ஏற்ப இந்த தங்க கடன் பத்திரங்களை 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் மதிப்பில் வாங்கலாம்.

2. நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) ஒருவர் அதிகபட்சம் 500 கிராம் மதிப்புள்ள தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

3. இந்தத் தங்க கடன் பத்திரங்களை காகித வடிவில் அல்லது டீமேட் (எலெக்ட்ரானிக்) வடிவில் நமது வாய்ப்பு வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

4. முதலீட்டு நோக்கில் தங்க நகையாக வாங்கும் போது உள்ள செய்கூலி, சேதாரம்  இதில் இல்லை.

 5. ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு ஆண்டுக்கு 2.75% வட்டி வருமானமாக  கிடைக்கும். தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.75% வட்டி  கிடைக்கும். வட்டி 6 மாதத்துக்கு ஒரு முறை தரப்படும்.

6. தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள்,  பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன என்பதால் முதலீடு செய்வது எளிது.

7.  பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இந்த தங்க கடன் பத்திரங்கள் மீது வர்த்தகம் நடப்பதால் பணத் தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ள முடியும்.

8. மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.

9. முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்த தங்க கடன் பத்திரங்களை கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக கொடுக்கலாம்.

10. ரூ. 20,000 வரையிலான முதலீட்டுக்கு ரொக்கப் பணமாக செலுத்தலாம்.  இதற்கு மேல் என்றால் டிடி, செக் கொடுக்கலாம்.  ஆன்லைன் மூலமும் முதலீடு செய்ய முடியும்.

இந்த தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக தர மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாக தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.