Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Friday, December 30, 2016

BHIM Apps பிம் ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது ?

பணமற்ற பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாரத் இன்டர்பேஸ் பார் மணி ( பிம்) எனற் புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் இந்த ஆப்ஸ், ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு செயல்படும். ஐஓஎஸ் (ஆப்பிள்) தளத்திற்கான இந்த ஆப்ஸ் விரைவில் வெளியிடப்படும். இந்த புதிய ஆப்ஸ் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடன் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதர யுபிஐ மற்றும் பாங்க் கணக்குகளோடு தொடர்பு கொண்டு இந்த ஆப்சை பயன்படுத்தலாம்.

BHIM Apps பிம் ஆப்ஸ்  எப்படி பயன்படுத்துவது
BHIM Apps பிம் ஆப்ஸ்  எப்படி பயன்படுத்துவது

இந்த பிம் ஆப்சை எப்படி பயன்படுத்துவது?

இந்த பிம் ஆப்சை, பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்தபின், உங்களுடைய பாங்க் கணக்கை இதில் பதிவு செய்து அதற்கான யுபிஐ னின் எண்ணை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயன்படுத்துபவரின் மொபைல் எண்தான், பயன்படுத்துபவரின் முகவரியாக இருக்கும். இவ்வாறு ஒருமுறை பதிவு செய்து கொண்ட பின் பிம் ஆப்சைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

பிம் ஆப்சைப் பயன்படுத்தி எப்படி பணத்தைப் பெறுவது?

பயன்படுத்துபவர், தங்களுடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நுகர்வோரிடமிருந்து பணத்தைப் பெறலாம்; அவர்களுக்கு பணத்தை அனுப்பலாம். யுபிஐ தொடர்பு இல்லாத பாங்குகளுக்கும் ஐஎப்எஸ்சி எண்ணைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யலாம்.

இந்த பிம் ஆப்சை ஏற்கும் பாங்குகள் எவை?

அலகாபாத் பாங்க், ஆந்திரா பாங்க், ஆக்சிஸ் பாங்க், பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா பாங்க், கத்தோலிக் சிறியன் பாங்க், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, டிசிபி பாங்க், தேனா பாங்க், பெடரல் பாங்க், எச்டிஎப்சி பாங்க், ஐசிஐசிஐ பாங்க், ஐடிபிஐ பாங்க், ஐடிஎப்சி பாங்க், இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், இந்துஸ் இந்த் பாங்க், கர்நாடகா பாங்க், கரூர் வைஸ்யா பாங்க், கோடக் மகிந்தரா பாங்க், ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் பாங்க், ஆர்பிஎல் பாங்க், சவுத் இந்தியன் பாங்க், ஸ்டாண்டர்டு சார்ட்டடு பாங்க், ஸ்டேட பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் பாங்க், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா பாங்க். இதர விவரங்கள்பயனீட்டாளர் பணபரிவரித்தனை தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மொபல் எண் தவிர வழக்கமான பணபரிவர்த்தன முகவரியையும் உருவாக்கி கொள்ளலாம். கியூஆர் குறியீட்டு மூலம் எளிதாக பண பரிவர்த்தனை செய்யாலாம்.
பிம் ஆப்ஸ் இப்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே செயல்படும். விரைவில் இதர மொழி வசதிகளும் செய்து தரப்படும்.

பிம் ஆப்சை எப்படி டவுன்லோடு செய்யலாம்?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியில் இந்த ஆப்சை டவுன்லோடு செய்ய : BHIM Apps

Tuesday, December 20, 2016

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017: மேஷ ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்?

2017 புத்தாண்டு ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம லக்கின ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்களாகும். மேஷ ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்.

2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும். 

ஆங்கில புத்தாண்டு 2017: மேஷ ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்?
ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

மேஷம் ராசியினருக்கு ஆங்கில புத்தாண்டு எப்படி? 

வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே எதிலும் துணிச்சலும் தான் நினைத்த காரியம் சாதிக்கின்ற எண்ணமும் தான் நினைக்கும் எண்ணப்படி பிறர் நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே.

ஜனவரி - தொழிலில் இடமாற்றம் :

மாதக் கடைசியில் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் உத்தியோகம் சம்பந்தமாக இடமாற்றம் உண்டாகும். 14ந் தேதிக்குப் பிறகு புதிய இடத்தில் பணியில் அமரும் நிலை உண்டாகும். பணியில் கொஞ்சம் மன ஈடுபாடு குறைவாக இருக்கும். வெளியூர் பயணம் காரணமாக செலவுகள் அதிகரிக்கும் சிலர் வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மாதக் கடைசியில் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும்.

மேஷ ராசிக்கான பலன் ஜனவரி மாதம் To டிசம்பர் தெரிந்து கொள்ளலாம் : Click Here

Friday, December 16, 2016

பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு - அரசு தேர்வுத்துறை இயக்ககம்

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2  மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு
தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.மேலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரிவான தேர்வு அட்டவணை பின்வருமாறு:

HSC Public Exam Time Table - March 2017 :

02.03.17 - வியாழன் - தமிழ் முதல் தாள்
03.03.17 - வெள்ளி -  தமிழ் இரண்டாம் தாள்
06.03.17 - திங்கள் - ஆங்கிலம் முதல் தாள்
07.03.17 - செவ்வாய்  -  ஆங்கிலம் இரண்டாம் தாள்
10.03.17 - வெள்ளி - வணிகவியல் /  மனையியல் / புவியியல்
13.03.17 - திங்கள் - வேதியியல் / கனக்குப் பதிவியியல்
17.03.17 - வெள்ளி - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / 
                                    கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ்க் தமிழ்)
21.03.17 - செவ்வாய் - இயற்பியல் / பொருளியல்
24.03.17 - வெள்ளி - தொழில் கல்வி தியரி / அரசியல் அறிவியல் /  செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்
27.03.17 - திங்கள் - கணிதம் / விலங்கியல் /  நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
31.03.17 - வெள்ளி - உயிரியால் / வரலாறு / தாவரவியல் / வணிக கணிதம்

SSLC Public Exam Time Table - March 2017 :

08.03.17 - புதன் - தமிழ் முதல் தாள்
09.03.17 - வியாழன் - தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 - செவ்வாய் - ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 - வியாழன் - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17- திங்கள் - கணிதம்
23.03.17 - வியாழன் - அறிவியல்
28.03.17 - செவ்வாய் - சமூக அறிவியல்
30.03.17 - வியாழன் - மொழி (விருப்பத் தேர்வு)

Tuesday, December 13, 2016

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 - மேஷம் இராசி முதல் மீனம் இராசி வரை பொதுப் பலன்கள் & பரிகாரங்களும்

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

மேஷ இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி விட்டீர்கள். இப்பொழுது சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பிரமாதமாக வாரி வழங்க போகிறார். இதுநாள்வரைபட்ட கஷ்டங்கள் பறந்து ஓடி விடும். 10,11-க்குரிய சனி பகவான், 9-ல் இருப்பதால் உத்தியோகம், தொழில் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பெற்றோர் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டும், உதவியும் கிடைக்கும். வழக்கில் வெற்றி தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இத்தனை நாள் இருந்த அலைச்சல் தீரும். இனி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை உயர்ந்து நிற்க்கும். 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி தொழில் அமோகமாக இருக்கும். 6-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும். ஓரளவு கடன் தொல்லை அகலும். அதேநேரம் புதிய கடன் வாங்கச் செய்யும். ஆகவே கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து வாரி வழங்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் வழங்கி வணங்குங்கள். செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்குங்கள்.

ஸ்ரீ சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.

ரிஷப இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு இது அஷ்டம சனி.அய்யோ சனி 8-ம் இடத்திற்கு வந்து விட்டதே? என்று பயப்பட வேண்டாம். ரிஷப இராசிக்கு சனி யோககாரகன். அஷ்டம சனியாக வந்தாலும் நிச்சயம் கெடுக்க மாட்டான். ரிஷப இராசிக்கு சனி தர்ம-கர்மாதிபதி. அவன் 2-ம் இடத்தை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், குழப்பங்கள் தீரும். திருமணம் தடைபட்டு இருந்தால் இனி வீட்டில் மேள சத்தம்தான். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும். தெய்வஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இழுத்துக்கொண்டு இருந்த வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொத்து-சுகங்கள் தேடி வரும். பல நாட்களாக பிடித்து வந்த நோய், நொடிகள் நீங்கி நலம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8-ம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் துவங்குவீர்கள். தொழிலில் நண்பர்களையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் உஷாராக இருங்கள். காரணம், 7-ம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். ஆனாலும் பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாக்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சனிக்கிழமையில் சனிபகவான் சந்நதியில் எள் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்

மிதுன இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரையில் 6-ம் இடத்தில் இருந்த சனி பகவான், இப்போது 7-ம் இடத்திற்கு வந்திருக்கிறார். உங்கள் இராசிக்கு 9-க்குரிய சனி, 7-ல் வந்திருப்பது நன்மையே தரும். பொதுவாக பாக்கியாதிபதி, சப்தமஸ்தானத்திற்கு வந்தால் எப்பேர்பட்ட பிரச்னையாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு. உயர்கல்வி அமையும். அடமானத்தில் இருந்த பொருட்கள் கைக்கு வந்து விடும். புதிய வாகனம் வாங்கக்கூடிய சாதகமான நேரம் இது. ஆனாலும், ஜென்ம இராசியை சனி நோக்குவதால் அலைச்சல் அதிகரிக்கும். காரணம், தொழில், வேலை என்று புதிதாக அமைத்து தந்துவிடுவார் சனிபகவான். அதனால் அப்படிதான் இருக்கும். அதோடு சற்று டென்ஷனும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக குடும்பத்தினர் கேட்டு வந்ததை வாங்கி தரும் யோகம் வந்து விட்டதால் அதை பூர்த்தி செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் மனைவியால் நன்மை அடைவார்கள். பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை படைப்பீர்கள்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
**************

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 - மேஷம்  இராசி முதல் மீனம் இராசி வரை பொதுப் பலன்கள் &  பரிகாரங்களும்  விரிவாக பார்க்க வாருங்கள் :  சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017

Monday, December 12, 2016

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்

திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவில் நாள்தோறும் காலையில் உமையாளுடன் சந்திரசேகரரும், மாலையில் பஞ்ச மூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் வீதிஉலா வந்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள்
5-ம் நாள் இரவு வெள்ளி ரி‌ஷப வாகனத்திலும், 6-ம் நாள் வெள்ளித் தேரிலும், 7-ம் நாள் மகா ரதத்திலும் அருணாசலேஸ்வரர் அபித குஜாம்பாளுடன் பக்தர்கள் வெள்ளத்தில் எழுந்தருளினார். மகாரதம் உள்பட 5 தேர்களையும் பக்தர்கள் மாட வீதிகளில் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தியுடன் முழங்கிய லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவில் தேர்கள் அசைந்தபடி பவனி வந்தன.

தீப விழாவின் உச்சகட்டமாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.


Sunday, December 11, 2016

மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன் வித்தியாசத்தில் தொடரை வென்றது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 631 ரன் குவித்தது. கேப்டன் வீராட்கோலி இரட்டை சதமும் (235 ரன்), முரளிவிஜய் (136), ஜெயந்த்யாதவ் (104) ஆகியோர் சதமும் அடித்தனர். அதில் ரஷீத் 4 விக்கெட் கைப்பற்றினார்.

மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது
மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது
231 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் என்ற மோசமான நிலையில் இருந்தது. ஜோரூட் 77 ரன் எடுத்தார். பேர்ஸ்டோவ் 50 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இன்று (திங்கட்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 49 ரன் தேவை. கைவசம் 4 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. இங்கிலாந்தின் எஞ்சிய 4 விக்கெட்டை எளிதில் கைப்பற்றினால் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணி பந்துவீச்சை தொடர்ந்தது.

அஸ்வினின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி தொடர்ந்து திணறியது.

நன்றாக ஆடி வந்த போஸ்டோவ் 51 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதை தொடர்ந்து வோக்ஸ் 107, ஆதில் ரஷித் (2), ஆண்டர்சன் (2) ஆகியோரின் விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றி முத்திரை பதித்தார்.

இங்கிலாந்து அணி 55.3 ஓவர்களில் 195 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் 55 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்ட் முதல் இன்னிங்சில் அவர் 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். ஜடேஜாவுக்கு 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஜெயந்த் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த வெற்றி மூலம் வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 246 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்தியா தொடரை வென்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

Wednesday, December 7, 2016

ஜெயலலிதா சமாதியில் அணையா விளக்குடன் நினைவிடம் அமைக்கப்படுகிறது அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 24 தேதி திறக்க தமிழக அரசு திட்டம்

அணையா விளக்குடன் ஜெயலலிதா சமாதியில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி திறக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சமாதி : 

மறைந்த தமிழக முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்.சமாதிக்கு பின்புறம் சுமார் 40 அடி தொலைவில் ஜெயலலிதாவின் சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதியை சுற்றி தற்காலிக இரும்பு தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த இடத்தில் கிரானைட் கற்களை கொண்டு சமாதி கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி விட்டன.

ஜெயலலிதா சமாதியில் அணையா விளக்குடன் நினைவிடம் அமைக்கப்படுகிறது
ஜெயலலிதா சமாதியில் அணையா விளக்குடன் நினைவிடம் அமைக்கப்படுகிறது
சமாதி கட்டுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அளவு எடுத்தனர். வெகுவிரைவில் ஜெயலலிதாவின் சமாதி கட்டி முடிக்கப்படும் என்று தெரிகிறது. சமாதி அமைக்கப்படும் கற்களில் ஜெயலலிதா பிறந்த தேதி மற்றும் மறைந்த நாள் இடம் பெறும். அவருடைய தாரக மந்திரமான, ‘மக்களால் நான். மக்களுக்காகவே நான்’ என்ற வாசகமும் பொறிக்கப்பட உள்ளது.

அதிகாரி தகவல் :

ஜெயலலிதாவின் சமாதி கட்டும் பணி முடிவடைந்தவுடன், அவரது அடைமொழியான ‘அம்மா’ பெயரில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடத்தில் இருப்பது போன்று அணையா விளக்குடன் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. 3 மாதிரி வரைப்படங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடலோர பாதுகாப்பு குழுமம் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். நினைவிடத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலையும் அமைக்கப்படும். அவருடைய வாழ்க்கை குறிப்பு, சாதனை திட்டங்களும் கல்வெட்டில் பொறிக்கப்படும். நினைவு தூணும் நிறுவப்படும்.

ஜெயலலிதா பிறந்தநாளில் திறக்க தமிழக அரசு திட்டம் :

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி அன்று நினைவிடத்தை திறக்கும் வகையில் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். தற்போது ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்

ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக அவரது உட லுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், டெல்லி மேல்-சபை தலைவர் குலாம் நபி ஆசாத், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள்.

தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி., தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், அவரது மனைவி பிரேமலதா, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஜி.ராமகிருஷ்ணன் (மார்க். கம்யூ), முத்தரசன் (இந்திய. கம்யூ.), விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள்.

ரஜினிகாந்த், விஜய், சிவகுமார், நாசர், விஷால், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், வடிவேலு, உதயநிதி, சரோஜாதேவி, நயன்தாரா, குஷ்பு, கவுதமி, சிம்ரன் உள்பட ஏராளமான திரை உலகினர் நேரில் சென்று ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்

ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. பலர் கண்ணீர் வடித்தனர். ஏராளமான பெண்களும், தொண்டர்களும் கதறி அழுதனர். முக்கிய தலைவர்களும், பிரமுகர்களும் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் செல்ல, பொது மக்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பெரும்பாலானோர் உள்ளே சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை.

இரவு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனவே, உள்ளே யாரும் நெருங்கமுடியவில்லை. இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் தடுப்பு கம்பி வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏராளமானோர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். நேரம் ஆக ஆக இங்கு சென்று அஞ்சலி செலுத்துவோர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஜெயலலிதா சமாதிக்கு வரும் அ.தி.மு.க. தொண்டர்கள் பலரும் இன்று மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர். ஏராளமான பெண்கள் அழுது அஞ்சலி செலுத்தினார்கள்.

Friday, December 2, 2016

ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் அவசியம் - RBI Bank [ரிசர்வ் வங்கி] அறிவிப்பு

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய ஜனவரி 1 முதல் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய ஜனவரி 1 முதல் ஆதார் எண் அவசியம்

ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள், இணையதள வங்கி சேவைகள், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் ஆதார் வழி மட்டுமே செய்ய முடியும். 

ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம்

ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொறுத்த வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்கள் இடையிலான கே.ஒய்.சி திட்டத்திற்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமையாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Thursday, December 1, 2016

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை டிச. 3ல் கொடியேற்றம், தீபத்திருவிழா டிச.12ல் கார்த்திகை மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது.  நாளை கொடியேற்றம் நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா ஒன்று. இந்தாண்டிற்கான தீபத்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை டிச. 3ல் கொடியேற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை டிச. 3ல் கொடியேற்றம்

இதையொட்டி தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. தினமும் இரவில் வெவ்வேறு வகையான வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 9-ந் தேதியும், 12-ந் தேதி மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் சார்பில் நடைபெற்று வருகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் கார்த்திகை தீப உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு துர்க்கை அம்மன் உற்சவமும், நேற்று இரவு பிடாரிஅம்மன் உற்சவமும் நடந்தது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பிடாரிஅம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து பிடாரிஅம்மன் வீதிஉலா நடந்தது. பிடாரி அம்மன் சன்னதியில் இருந்து சிம்மவாகனத்தில் புறப்பட்டு கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் உற்சவம் நடக்கிறது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா 2016 : 

திருவண்ணமலையில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 12ம் தேதி மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அண்ணாமலையார் கோயிலில், துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை நவம்பர் 30ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 12ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலையில் மகா தீபமும் ஏற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை நவம்பர் 30ஆம் தேதி தீபத் திருவிழா காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் மாட வீதி வர உள்ளார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 1ஆம் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம், டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

தீபத்திருவிழா கொடியேற்றம்:

டிசம்பர் 3ஆம் தேதி காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 8ஆம் தேதி முற்பகலில் 63 நாயன்மார்கள் மாட வீதியுலா நடைபெறவுள்ளது.

மகா தேரோட்டம்: 

டிசம்பர் 9ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறவுள்ளது. முதலில், விநாயகர் தேரோட்டம் காலை 6.05 - 7.05 மணிக்குள் புறப்படுகிறது. பின்னர் வள்ளி தெய்வானை சமேத முருகன், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு, மற்றொரு தேர் புறப்படும். காலை 6.30 மணியளவில் தொடங்கும், மகா தேரோட்டம் நள்ளிரவு நடைபெறும்

தீபத்திருவிழா:

அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 12ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர், அன்று மாலை ஐந்து மணியளவில் தீப தரிசன மண்டபத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்கிறார். அதனைத் தொடர்நது 2,668 உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை ஆறு மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தெப்ப உற்சவம்: 

இதையடுத்து, 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். மேலும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் டிசம்பர் 16ஆம் தேதி மாட வீதியுலா வந்ததும், கார்த்திகை தீபத் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலைக்கு 2,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

உலக பிரசத்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா வரும் டிசம்பர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதால் அதனை முன்னிட்டு இன்று காலை அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ராஜ கோபுரம் முன்பு பந்தகால் நடப்பட்டது. ஏறாளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தீபத்திருவிழா தீபத்திருவிழா கார்த்திகை தீபத்திருவிழா
அங்கு சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் கூடி ஏகாந்தம் கண்டாடுவார்
நம்ம அண்ணாமலையப்பன் பெயரை சொல்லி சொல்லி பாடி அனந்த கூத்தாடுவார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

நாளை இரவு கார்த்திகை தீப திருவிழா அம்மன் உற்சவம் தொடங்குகிறது. நாளை காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதிஉலா நடக்கிறது.

1-ந் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம், 2-ந் தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. 3-ந் தேதி காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றபடுகிறது

நாளை முதல் தினமும் சாமி வீதி உலா நடக்கிறது. 9-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 12-ந் தேதி அதிகாலை பரணி தீபம், மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் மின் அங்காரத்தில் ஜொலிக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா ஒன்று. இந்தாண்டிற்கான தீபத்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

இதையொட்டி தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. தினமும் இரவில் வெவ்வேறு வகையான வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 9-ந் தேதியும், 12-ந் தேதி மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் சார்பில் நடைபெற்று வருகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் கார்த்திகை தீப உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு துர்க்கை அம்மன் உற்சவமும், நேற்று இரவு பிடாரிஅம்மன் உற்சவமும் நடந்தது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பிடாரிஅம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து பிடாரிஅம்மன் வீதிஉலா நடந்தது. பிடாரி அம்மன் சன்னதியில் இருந்து சிம்மவாகனத்தில் புறப்பட்டு கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் உற்சவம் நடக்கிறது.

தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட உள்ளன. 16 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க படுகின்றன. மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தபட்டுள்ளது.

பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

Wednesday, November 30, 2016

மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன? நீங்கள் அறியவேண்டிய 10 விஷயங்கள்?

அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த நாள் முதலே, சிரமத்தில் இருந்த பலருக்கும் கைகொடுத்தது இணையவழி பணப்பரிமாற்றங்கள்தான். இந்த மின்னணு பரிமாற்றங்களை நோக்கி அதிகம் முன்னேறவும், தற்போது அரசு நம்மை அறிவுறுத்தி வருகிறது.

மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன?
மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன?
இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், இ-வாலட்கள் என பலவழிகள் மின்னணுப் பரிமாற்றங்களுக்கு உதவிவருகிறது. பல இ-வாலட்கள் நாம் மொபைலில் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் அவை அனைத்தும் தனியார் சேவைகள். இந்நிலையில் பெரும்பாலோனோர் மத்தியில் அரசு சேவையான யு.பி.ஐ பணப்பரிமாற்றம் பற்றிய ஆர்வம் வந்துள்ளது. எனவே அதுபற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

1. மத்திய அரசின் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் சேவைதான் இந்த யு.பி.ஐ. ஒரு ஸ்மார்ட்போன், ஒரு ஆண்ட்ராய்டு ஆப், உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை வைத்துக் கொண்டே இதில் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.

2. இந்த சேவையை பயன்படுத்த ஏதேனும் ஒரு வங்கியின் யு.பி.ஐ ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் சரி..மற்றொரு வங்கியின் ஆப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

3. இதன் மூலம் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்ப அவரது வங்கி கணக்கு எண், IFSC கோட் என எதுவுமே வேண்டாம். நீங்களும் கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு எண், ஆன்லைன் பேங்கிங் விவரங்கள் போன்ற எதையும் கொடுக்க வேண்டாம்.

4. இதன் மூலம் உடனடியாக ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை அனுப்ப முடியும். நாம் பணம் அனுப்புவதைப் போலவே நீங்கள் மற்றொருவரிடம் இருந்து உடனடியாக நம்மால் பணம் பெறவும்  முடியும்.

5. இதனை பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை பார்ப்போம். முதலில் ஏதேனும் ஒரு வங்கியின் ஆப்பை இன்ஸ்டால் செய்து அதில் உங்கள் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஆப்பை திறந்ததுமே, ஆப் உங்களின் அனுமதியைக் கேட்டுவிட்டு எஸ்.எம்.எஸ் மூலமாக உங்கள் போன் எண்ணை உறுதி செய்துகொள்ளும். அதேபோல ஆப்பை பயன்படுத்த பாஸ்வேர்டையும் செட் செய்துகொள்ள வேண்டும்.

6. பிறகு ஆப் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை இதில் இணைத்துக் கொள்ளும். உங்களது போன் எண் ஆனது எந்த வங்கிகளில் எல்லாம் இணைக்கப்பட்டு உள்ளதோ, அந்தக் கணக்குகளை மட்டுமே இது எடுத்துக்கொள்ளும்.

7. கணக்கு விவரங்களை இணைத்தபிறகு விர்ச்சுவல் ஐடி எனப்படும் தனிப்பட்ட ஐடி.,யை உருவாக்கிக் கொள்ளவேண்டும். விர்ச்சுவல் ஐடி எனப்படும் இந்த முகவரிதான் பணம் அனுப்பவும், பெறவும் பயன்படும் முகவரி. இவற்றுடன் வங்கி மூலம் பெறப்பட்ட எம்.பின்னையும்(M-Pin) பதிவு செய்துவிட்டால், உங்கள் யு.பி.ஐ ஆப் பணம் அனுப்பவும், வாங்கவும் தயாராகிவிடும். இந்த ஆப்பில் உங்கள் ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம். இதன் உதவியுடன் ஆதார் எண் மூலமும் பணம் அனுப்ப முடியும்.

8. அதேபோல பிறரிடம் இருந்து பணம் பெற, பணம் பெற வேண்டியவரின் விர்ச்சுவல் முகவரியைக் கொடுத்து, எவ்வளவு பணம் பெற வேண்டும் என்பதனை கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த பணப் பரிவர்த்தனைக்கு ஒருநாள், ஒருவாரம் என நேர அளவும் செட் செய்துகொள்ள முடியும். நீங்கள் பணம் கேட்டு விண்ணப்பித்த உடனேயே, இந்த கோரிக்கை, நீங்கள் பணம் கேட்டு விண்ணப்பித்தவரின் மொபைலுக்கு சென்று விடும். உடனே அவர் தனது எம்-பின்னை கொடுப்பதன் மூலமாக பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும். உடனே உங்கள் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும் என்பது இல்லை. நீங்கள் நிர்ணயித்துள்ள கால அளவுக்குள் அதனை செய்தால் போதும். விர்ச்சுவல் முகவரி தவிர வேறு எதையும் நாம் பகிர்ந்துகொள்வது இல்லை என்பதால் பாதுகாப்பானது.

யு.பி.ஐ பணப்பரிமாற்றம் - நீங்கள் அறியவேண்டிய 10 விஷயங்கள்
9. இதன்மூலம் கடைக்காரர்கள் கூட, தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்திற்கு பதிலாக, இதில் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். ஷாப்பிங் செய்யும் போது கேஷ் ஆன் டெலிவரி போன்றவற்றிலும் இது பயன்படும்.

10. தற்போது இதில் இருக்கும் பெரிய பிரச்னையே, இதில் இருக்கும் தொழில்நுட்ப குறைபாடுகள்தான். ப்ளே ஸ்டோரில் இருக்கும் எந்தவொரு யு.பி.ஐ App-ம் நல்ல ரிவ்யூக்களை பெறவில்லை. இதனை பிராக்டிக்கலாக பயன்படுத்தும் போதும், நிறைய சிக்கல்கள் வருகின்றன. டூயல் சிம் போன்களில் போன் எண்ணை உறுதி செய்வது, வங்கி கணக்குகளை இதில் இணைப்பது போன்றவற்றில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை விரைவாக சரிசெய்தால் மட்டுமே இதன் பயன் அனைவரையும் சென்றடையும். அதேபோல இதில் நிறையப்பேர் இணைந்தால் மட்டுமே இது வெற்றிகரமான முறையாகவும் அமையும்.

Monday, November 28, 2016

திருமண பொருத்தம் என்றால் என்ன? ஏன் 10 பொருத்தம் அவசியம் பார்க்க வேண்டும்?

திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம். 

திருமண பொருத்தம் என்றால் என்ன?
திருமண பொருத்தம் என்றால் என்ன?
நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள். அதிலும் கூட மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் போன்றவை இல்லற வாழ்க்கையை குறிப்பவை, இவை கண்டிப்பாக பொருந்த வேண்டும் என்று ஆண், பெண் வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படி ஆண், பெண் இராசி, ஜாதகம் பொருந்தி அமைந்தால் தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

இனி, திருமண பொருத்தம் என்றால் என்ன மற்றும் அதன் உண்மை விளக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்.

தினப் பொருத்தம்:

தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

கணப் பொருத்தம்:

குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம் தான் குணப் பொருத்தம். மனைவியாக / கணவனாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

மகேந்திரப் பொருத்தம்:

திருமணம் ஆகப்போகும் ஆண், பெண்ணுக்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்:

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் பெருக பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தமும் கூட ஓர் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

யோனிப் பொருத்தம்:

யோனிப் பொருத்தம் முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது பொருத்தம் தான் யோனிப் பொருத்தம். இந்த பொருத்தம் இருவருக்கும் ஒத்துப் போக வேண்டியது அவசியம்.

ராசிப் பொருத்தம்:

பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு எனப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் சிலர் ஒரே ராசி என்றால் கூட அது உத்தமம் தான். ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் இந்த பொருத்தம் முக்கியம்.

ராசி அதிபதிப் பொருத்தம்:

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். பன்னிரண்டு இராசிக்கும் அதிபதி உண்டு அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையில் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. இதில் ஆண், பெண் இராசிக்கு இடையில் பகை தவிர மற்ற இரண்டு இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.

வசியப் பொருத்தம்:

கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஈர்ப்பு ஏற்படும் கூறப்படுகிறது.

ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம்:

இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

வேதைப் பொருத்தம்:

திருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்ப - துன்பங்கள் எவ்வாறு அமையும், எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த வேதைப் பொருத்தம்.

அப்படி இந்த பொருத்தங்களில் ஏதேனும் சிறுசிறு குறைபாடு அல்லது குளறுபடி இருந்தால், அதை தோஷம் கழித்து சரிசெய்யலாம் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்

Saturday, November 26, 2016

பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை நோட்டை எங்கெல்லாம் மாற்றலாம்?

பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள சேவைகள் குறித்த பட்டியல் இதோ.

டிசம்பர் 15ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டை சில சேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் சலுகை அளித்துள்ளது. அப்படி சலுகை அளிக்கப்பட்டுள்ள சேவைகள் குறித்த விவரம்

பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை நோட்டை எங்கெல்லாம் மாற்றலாம்
பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை நோட்டை எங்கெல்லாம் மாற்றலாம்
1. டோல் கேட்டுகள் மற்றும் பெட்ரோல் பங்குகள்.

2. மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம். 

3. ரூ. 500 வரைக்கும் செல்போன்களில் டாப்அப் செய்து கொள்ள பயன்படுத்தலாம். 

4. நுகர்வோர் கூட்டுறவுக் கடைகளில் உரிய அடையாள அட்டைகளைக் காட்டி ரூ. 5000 வரை பொருட்களை வாங்கும்போது  இந்த பழைய நோட்டுக்களைப் பயன்படுத்தலாம். 

5. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பால் பூத்துகளில் பால் வாங்க பயன்படுத்தலாம். 

6. குடிநீர், மின்சாரக் கட்டணத்தை செலுத்த பயன்படுத்தலாம். 

7. அரசு மருத்துவமனைகள், மருந்தகங்களில் பயன்படுத்தலாம். 

8. மருத்தவர்களின் சீட்டுடன் அனைத்து மருந்துக் கடைகளிலும் மருந்து வாங்க பயன்படுத்தலாம் 

9. ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள்.

10. விமான நிலையங்களில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம். 

11. மயானங்கள் இடுகாடுகளில் பயன்படுத்தலாம். 

12. காஸ் சிலிண்டர்களை வாங்கப் பயன்படுத்தலாம். 

13. ரயில்களில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தலாம். 

14. புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம். 

15. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் நினைவிடங்களில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம் (மாமல்லபுரம் போல) 

16. மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் கட்டணங்கள், வரிகள், அபராதங்கள் உள்ளிட்டவற்றைக் கட்ட பயன்படுத்தலாம். 

17. கோர்ட் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம். 

18. அரசு நிறுவனங்கள் நடத்தும் விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க பயன்படுத்தலாம்.

19. அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கவுண்டர்களில் டிக்கெட் வாங்கப் பயன்படுத்தலாம். 

20. மத்திய, மாநில அரசு, நகராட்சி, ஊராட்சிப் பள்ளிகளில ரூ. 2000 வரை கல்விக் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம். 

பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா
பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா

பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆயிரம் ரூபாய் நோட்டு இனி எந்தவொரு பரிவர்த்தனைக்கும் செல்லாது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 21 இடங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பழைய 1000 ரூபாய் நோட்டுகளை இனி வங்கிகளைத் தவிர எங்கும் மாற்ற முடியாது என்ற சூழல் உள்ள நிலையில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா..?

இதோ உங்களுக்கான பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் செல்லும் என்பதற்கான பட்டியல்.

மருத்துவமனை:
அரசு மருத்துவமனை, அரசு மருந்தகங்கள் போன்ற இடங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் செல்லும் போது பழைய 500 ரூபாய் செல்லும்.

மருந்தகங்கள்:
மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை சீட்டு மற்றும் அவர்கள் வழங்கும் ஐடி படிவத்தைக் காண்பித்து பழைய 500 ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம்.

டிக்கெட் கவுண்டர்கள்:
ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள், அரசு மற்றும் மாநில அரசு போக்குவரத்து கழகங்களின் டிக்கெட் கவுண்டர்கள் ஆகிய இடங்களில் பழைய 500 ரூபாய் செல்லும்.

பால் பூத்துகள்:
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பால் பூத்துகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலும்.

எரிசக்தி நிலையங்கள்:
அரசு நிறுவனங்கள் நடத்தும் பெட்ரோல், டீசல், எரிவாயு நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

சுடுகாடு:
அரசு இயக்கி வரும் சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு 500 ரூபாய் செல்லும்.

விமான நிலையங்கள்:
வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு வரும் மற்றும் செல்லும் பயணிகளுக்கு 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

சுற்றுலாப் பயணிகள்:
வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் 5000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

கூட்டுறவு கடைகள்:
கூட்டுறவு கடைகளில் நுகர்பொருள் வாங்கும் போது பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

சமையல் எரிவாயு:
சமையல் எரிவாயு வாங்கும் போது பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

ரயில் பயணம்:
ரயில் பயணங்களில் உணவுப் பொருட்கள் வாங்கும் போது பழைய 500 ரூபாய் செல்லும்.

புறநகர் ரயில் சேவை:
புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் டிக்கெட் கவுண்டர்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும்.

அருங்காட்சியகம்:
இந்திய தொல்பொருள் கழகம் இயக்கி வரும் அருங்காட்சியகம் போன்ற இடங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும்.

அரசு நிறுவனங்கள்:
மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரி, அபராதம் போன்றவற்றிற்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

பயன்பாடுகள்:
மின்சாரம், தண்ணீர் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்கள் செலுத்தும் போது பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும். ஆனால் இது நடப்பு பில்கள் மற்றும் பழைய பில்களுக்கு மட்டுமே. முன்பணமாக்கச் செலுத்த இயலாது.

நீதி மன்றம்:
நீதி மன்றங்களில் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

விதைகள்:
நியமிக்கப்பட்ட மையங்களில் இருந்து விதைகள் வாங்கப் பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

பள்ளி கட்டணம்:
மத்திய, மாநில, நகராட்சி மற்றும் உள்ளூர் பள்ளி கட்டணங்கள் செலுத்த 2000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

கல்லூரிகள்:
மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகள் கட்டணம் போன்றவற்றுக்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

மொபைல் ரீசர்ஜ்:
பீரிபெய்டு மொபைல் சிம் கார்டுகளின் டாப் அப் ரீசார்ஜ்கள் ரூ.500 செய்யும் போது செல்லும்.

கூட்டுறவு ஸ்டோர்கள்:
நுகர்பொருள் கூட்டுறவு ஸ்டோர்களில் 5,000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய்களை வழங்கி பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Friday, November 25, 2016

கர்ப்பிணிகளின் பெண்களின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்?

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள் :

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். 

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்

இந்த அறிகுறிகள் எல்லாம் அனுபவமிக்க பல பெண்கள் கூறியவை. மேலும் இந்த அறிகுறிகளைக் கொண்டு கணித்தப்படியே பல பெண்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இங்கு ஒரு பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

அறிகுறி #1:

கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே, அவர்களின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என அறியலாம். அதில் கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #2:

 கர்ப்ப காலத்தில் பெண்களின் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் இருக்கும். அதில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை. அதுவே ஒருவித மேகமூட்டமான வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் பெண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #3:

கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் மற்றும் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். அதில் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #4:

கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ப மார்பகங்கள் பெரிதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இடது மார்பகங்கள் தான் பெரிதாகும். ஆனால் ஆண் குழந்தையைச் சுமக்கும் பெண்களுக்கு இடது மார்பகத்தை விட, வலது மார்பகம் பெரிதாகும்

அறிகுறி #5:

கர்ப்ப காலத்தில் பாதங்கள் எப்போதும் மிகவும் குளிர்ச்சியுடன் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்

அறிகுறி #6:

கர்ப்ப காலத்தில் பரிசோதனை செய்யும் போது, மருத்துவர்கள் குழந்தையின் இதயத் துடிப்பையும் அளவிடுவார்கள். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்தித்திகு 140 முறை துடித்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #7:

வயிற்றில் ஆண் குழந்தை வளர்ந்த்ல், கர்ப்ப காலத்தில் தலைமுடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதுவும் சாதாரண நிலையை விட சற்று அதிகமாகவே முடியின் வளர்ச்சி இருக்கும்

கர்ப்பிணிகளின் பெண்களின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை
கர்ப்பிணிகளின் பெண்களின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை
அறிகுறி #8:

ஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கர்ப்பிணிகளுககு புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்குமாம்

அறிகுறி #9:

கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமான சோர்வை உணரக்கூடும். இந்நிலையில் தூங்கும் போது, எப்போதும் இடது பக்கமாக தூங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்

அறிகுறி #10:

ஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கைகளில் வறட்சிகள் மற்றும் வெடிப்புக்கள் அதிகம் வரும்.

அறிகுறி #11:

பொதுவாக கர்ப்ப காலத்தில் காலை வேளையில் பெண்கள் வாந்தி அல்லது குமட்டல் உணர்வால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் இம்மாதிரியான அறிகுறி ஏதும் இல்லாமல் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

அறிகுறி #12:

கர்ப்ப காலத்தில் வயிறு வட்டமாகவும், வயிறு மட்டும் பெரியதாகவும் இருக்கும். இப்படி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

Wednesday, November 9, 2016

பொது மக்கள் வசதிக்காக வருகின்ற சனி, ஞாயிறு வங்கிகள் செயல்படும் & வங்கி உதவி மையம் திறப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வருகின்ற சனி, ஞாயிறு வங்கிகள் வழக்கம் போல செயல்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு : 

ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். மேலும், இருப்பு வைத்துள்ள இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறினார். 
ஆனால், இன்று வங்கிகள் விடுமுறை. ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்பட்டனர். பெரும்பாலான கடைகளில் இந்த ரூபாய் நோட்டுகளை வாங்காததால் அத்யாவசிய பொருட்களை வாங்குவதில் கடும் சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2-வது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2-வது சனிக்கிழமை என்றாலும் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

2000 ரூபாய் நோட்டு விநியோகம்: வாங்க மக்கள் ஆர்வம் : 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வாங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  ரூ 2,000 நோட்டை ஆர்வத்துடன்  வாங்கிச் செல்கின்றனர்.

2000 ரூபாய் நோட்டு விநியோகம்: வாங்க மக்கள் ஆர்வம்

வங்கிகளில் பழைய ரூ.500, ரூ 1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

சென்னை ரிசர்வ் வங்கியில் பழைய 500, 1000 நோட்டுகளை கொடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மொத்தம் 8 கவுண்டர்களில் திறக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னை ரிசர்வ் வங்கியில் மாலை நான்கு மணி வரை பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். 

சென்னையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அந்தந்த வங்கிக் கணக்கு உள்ளவர்கள் இன்று மாலை 4 மணி வரை பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி 2000 ரூபாய் புதிய நோட்டுகளை பெறலாம். இதற்கென அனைத்து வங்கிகளிலும் விண்ணப்பங்கள் கொடுப்பட்டு வருகின்றன. அந்தந்த குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் மதியத்திற்கு மேல் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக் கொள்ளலாம் என வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. காலையிலிருந்து மக்கள் கூட்டம் வங்கிகளில் அலைமோதி வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறப்பு : 

பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.in இணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் 044- 2538 1390 அல்லது 2538 1392 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் குவிந்த மக்கள் :

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் வங்கிகளில் திரண்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும், இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும், 4000 ரூபாய் வரை புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்களிலும் இதுபோன்று ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதேசமயம் நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர்.  ஏ.டி.எம். மையங்களிலும் நாளைதான் புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நாடு முழுவதும் இன்று வங்கி திறக்கப்பட்ட நிலையில், பணத்தை மாற்றுவதற்காகவும், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர். காலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுச் செல்கின்றனர்.

பல்வேறு பகுதிகளில் 500 ரூபாய் நோட்டுக்கள் வரவில்லை என்பதால் புதிய 2000 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படுகின்றன. 

இதற்காக வங்கிகளில் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதனை பூர்த்தி செய்து கொடுத்து பணம் பெற்றுச்செல்கின்றனர். 

தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பணம் மாற்றுவதற்காக மக்கள் குவிந்துள்ளனர். இதனால் பல்வேறு வங்கிகளின் முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tuesday, November 8, 2016

ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது? எவ்வளவு மாற்ற முடியும்? நீங்களே வங்கிக்கு போக வேண்டுமா? : ரிசர்வ் வங்கியின் விரிவான விளக்கத்தை பாருங்கள்:

ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இவை. 

சென்னை: கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இனி உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது என யோசிக்கிறீர்களா? அல்லது மாற்றுவதற்கு வங்கிக்கு செல்லப் போகிறீர்களா? 

ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது?
ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது?
ரிசர்வ் வங்கியின் விரிவான விளக்கத்தை பாருங்கள்: 

  • கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கவே ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


  • மத்திய அரசின் அறிவிப்பால் இனி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாதவையாகிவிட்டன. அதே நேரத்தில் உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான பணத்தை புதிய ரூ 500, ரூ 2,000 மற்றும் இதர ரூபாய் நோட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். 


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.


  • உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.


  • உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். 


  • ரூ4,000க்கு மேல் உங்களுக்கு தேவை இருப்பின் வங்கிக் கணக்குக்கு மாற்றி செக் அல்லது நெட்பேங்கிங் அல்லது கிரெடிட்டெபிட் கார்டுகள் மூலம் பயன்படுத்தலாம்.


  •  உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லையெனில் உரிய ஆவணங்களைக் கொடுத்து வங்கிக் கணக்கை தொடங்கலாம்.


  •  ரூ4,000 வரை பணத்தை மாற்றுவதற்கு நீங்கள் நேரடியாக உரிய அடையாள அட்டையுடன் வங்கிக்கு நேரடியாக செல்லலாம். எந்த ஒரு வங்கியின் கிளைக்கும் சென்று நீங்கள் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.


  •  நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல முடியாத நிலையில் எழுத்துப்பூர்வமான அத்தாட்சி கடிதத்தை உரிய அடையாள அட்டைகளுடன் கொடுத்தனுப்பியும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். நீங்களே நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை மாற்றிக் கொள்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். 


  • ஏடிஎம்கள் இன்று இயங்காது. ஏடிஎம்கள் செயல்பட தொடங்கும் நிலையில் நவம்பர் 18-ந் தேதி வரை உங்களால் அதிகபட்சமாக ரூ2,000 மட்டுமே எடுக்க முடியும். 


  • நவம்பர் 19-ந் தேதி முதல் ஏடிஎம்களில் ரூ4,000 வரை ஒருநாளுக்கு அதிகபட்சமாக எடுக்க முடியும். வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை நீங்கள் அதிகபட்சமாக ஒருநாளைக்கு ரூ10,000 வரை மட்டுமே எடுக்க முடியும். 


  • வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ20,000 வரை மட்டுமே உங்களால் எடுக்க முடியும். நவம்பர் 24-ந் தேதிக்கு பின்னரே இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும்.


  • ஏடிஎம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ500, ரூ1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும். ரூ500, ரூ1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். வர்த்தக ரீதியாக வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி ஆகியற்றில் டிசம்பர் 30-ந் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். 


  • டிசம்பர் 30-ந் தேதிக்குள் உங்களால் தவிர்க்க இயலாத காரணங்களால் மாற்ற முடியாமல் போனால் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உரிய ஆவணங்களை காண்பித்து மார்ச் 31-ந் தேதி வரையும் ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்ற முடியும்.


  • நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் உரிய ஆவணங்களுடன் அத்தாட்சி கடிதம் ஒன்றை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ அலுவலக பணியாளர்களிடமோ கொடுத்து பணத்தை மாற்ற முடியும். 


  • நீங்கள் சுற்றுலா பயணியாக இருந்தால் விமான நிலையங்களில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்ற முடியும். அரசு மருத்துவமனைகளில் கட்டண்ம செலுத்தவும், அரசு பேருந்து டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் ஆகியவற்றை பெறவும் நள்ளிரவு முதல் 72 மணிநேரம் வரை ரூ500, ரூ1,000 நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். 


  • ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர், ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, பான் கார்டு, அரசு அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை ஆகியவைதான் அடையாள அட்டைகளாக ஏற்கப்படும். 


கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.in, www.finmin.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம் 

பணப் பரிமாற்றம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள எண்: 022 22602201/022 22602944.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி?

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி?

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகிறது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகிறது.

இந்தியா முழுவதும் நேற்று இரவு திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவைகளை நாளை (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 30-ந் தேதிக்குள் தங்களது வங்கிகள், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யலாம்.

அதேபோல ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக்கொள்ளவும் முடியும். 24-ந் தேதி வரை ஒருவர் ஒருசமயத்தில் அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும்.

டிசம்பர் 30-ந் தேதிக்குள் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாதவர்கள் ரிசர்வ் வங்கியில் ஒரு பிரகடனம் எழுதிக்கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அதற்கு மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து இந்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியா நேர்மையான, ஊழலற்ற நாடாக விளங்குவதற்காக அரசு புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி 10-ந் தேதி (நாளை) முதல் இவைகளை வெளியிடுகிறது. இந்த நடவடிக்கை நாட்டின் நிதி மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு உதவும்.

உங்களை வேறு யாரும் கள்ளத்தனமான பணத்தை மாற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காதீர்கள். இரவுக்கு பின்னர் ஒருவர் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்குவது அவர்களது பொறுப்பு தான். புதிய 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டை படமும், புதிய 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் படமும் பொறிக்கப்பட்டு இருக்கும். கண் பார்வையற்றவர்களும் இந்த நோட்டுகளை அடையாளம் காணும் வகையில் அடையாள குறியீடுகள் இருக்கும்.

இந்த மாற்றங்களின் மூலம் இந்தியாவில் 1,000 ரூபாய் நோட்டுகள் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கெல்லாம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லும்?

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனை உள்ள சில இடங்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இரு தினங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:-

அரசு மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை வாங்கி கொள்வார்கள்.

அஞ்சலகங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகளாக மாற்றலாம்.

நவம்பர் 11-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் ரயில் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டு செல்லும்

விமான நிலையங்களில் உள்ள டிக்கெட் மையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 11-ம் தேதி வரை செல்லும் 

ரயில் டிக்கெட் புக்கிங், அரசு பேருந்து மையம் ஆகியவற்றில் மாற்றிக் கொள்ளலாம்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பால் நிலையங்களில் நோட்டுகள் பெறப்படும்.


பிரதமர் அறிவிப்பு எதிரொலி: ஏ.டி.எம். மையங்களில் அலைமோதும் கூட்டம்

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், வங்கிகளில் டிசம்பர் 30-ம் தேதிக்குள் டெபாசிட் செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகளில் மட்டும் 11ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நோட்டுக்கள் 10-ம் தேதி புழக்கதிற்கு வருகிறது. இந்த நடைமுறைகள் அமலுக்கு வருவதையொட்டி, நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 9, 10) ஏ.டி.எம். மையங்கள் செயல்படாது. வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ன. 

இந்த முடிவு யாருக்கும் தெரியாது என்றும், இது மிகவும் சாதகமான நடவடிக்கை என்று பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் புதிய எண்களுடன் கூடிய 10, 20, 100 மற்றும் 1000 நோட்டுக்கள் கூடுதலாக அச்சிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் பொதுமக்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்கள் நாளை காலையில் அத்யாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். சிறிய பெட்டிக்கடை, பால் கடை முதல் பலகாரக் கடை வரையில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதை தவிர்ப்பார்கள். எனவே, 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக பொதுமக்கள் ஏடிஎம் மையங்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனால், ஏடிஎம் மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த அறிவிப்பினால் வங்கிகள் விடுமுறை : 

வங்கிகள், ஏடிஎம் இயந்திரங்கள் மூடல்.. பண பரிமாற்றத்தில் அதிரடி கட்டுப்பாட்டு.. ஆர்பிஐ அறிவிப்பு..! நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. ஏடிஎம் இயந்திரமும் இயங்காது. பண பிரமாற்றங்கள் அதிகளவில் முடக்கம்

மத்திய அரசு இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என நவம்பர் 8ஆம் தேதி இரவு அறிவித்த உள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் அதிர்ந்துபோய் உள்ளனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி மக்களின் அன்றாட பண புழக்கத்தில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

வங்கிகள் விடுமுறை : 

புதன்கிழமை (நவம்பர் 9ஆம் தேதி) இந்தியாவில் தனியார், பொதுத்துறை, கூட்டுறவு, கிராம மற்றும் ஊரக வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

ஏடிஎம் இயந்திரங்கள்: 

அதேபோல் ஏடிஎம் இயந்திரம், பணம் டெப்பாசிட் செய்யும் இயந்திரம் என அனைத்தும் இன்று செயல்படாது. ஆனால் இணையம் மற்றும் மொபைல் வங்கியியல் இயங்கும்.

வங்கிகளின் உள் வேலைகள் : 

வங்கிகள் இன்று ஒரு நாளுக்குள் தனது கஜானா மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வேலைகளைச் செய்ய உள்ளது.

2,000 ரூபாய் மட்டுமே.. அதன்பின் நவம்பர் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான காலத்திற்கு ஏடிஎம் இயந்திரங்களில் வெறும் 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் நவம்பர் 19ஆம் தேதி முதல் இந்த அளவுகோல் 4000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது

வங்கியில் பணம் எடுத்தல்: 

மேலும் வங்கி வைப்புக் கணக்கில் இருந்து வித்டிரா அளவு நவம்பர் 9ஆம் தேதி முதல் ஒரு நாளுக்கு 10,000 ரூபாயாகவும், ஒரு வாரத்திற்கு 20,000 ரூபாய் வரை மட்டுமே அனுமதி அளிக்கிறது.

ஆர்பிஐ: 

 நவம்பர் 10ஆம் தேதி முதல், கார்பரேட் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனகள், அறக்கட்டளைகள், என அனைத்துத் தரப்பினரும், தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு ரிசர்வ் வங்கி கிளையிலும் மொத்தமாக மாற்றிக்கொள்ளலாம். மாற்றப்படும் தொகை அவர்களது வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகள் மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணம் மட்டும் அல்லாமல் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை முழுமையாகக் குறைக்க முடியும்