Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Tuesday, June 2, 2015

எல்.ஐ.சி. பாலிசியை கொண்டு கடன் பெறுவது எப்படி?

உங்கள் எ.ஐ.சில் பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், அதற்கு நீங்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக எல்.ஐ.சி. பாலிசியை வைத்திருப்பவர்கள் மட்டுமே கடன் பெறும் தகுதியை பெறுவார்கள்.
பாலிசியின் தொகை மற்றும் காலத்தை பொறுத்து கடன் தொகை மாறுபடும். இது பாதுகாக்கப்பட்ட கடன் என்பதால் மற்ற கடன்களை காட்டிலும் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்.
எல்.ஐ.சி. பாலிசியை கொண்டு கடன் பெறுவது எப்படி
எல்.ஐ.சி. பாலிசியை கொண்டு கடன் பெறுவது எப்படி

எப்படி விண்ணப்பிப்பது?

எல்.ஐ.சி. பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு ஒருவர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பம் எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தில் அல்லது ஏஜென்ட் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த பாரத்தை எல்.ஐ.சி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
பெயர் மாற்றம்:
பாலிசியை வைத்து வாங்கப்படும் கடனின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் அந்த கடனுக்கான விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் இந்த பாலிசி நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்படும்; அதாவது உங்கள் அசல் எல்.ஐ.சி. பாலிசியை ஒப்படைக்க வேண்டும்.
வட்டி விகிதங்கள்:
இந்த கடன்களுக்கு, வட்டி விகிதமாக 9-10 சதவீதம் வரை வசூலிக்கப்படும். இதனை அறையாண்டிற்கு ஒரு முறை கட்ட வேண்டும்.
கடன் தொகை:
இந்த பாலிசியின் கீழ் அதிகபட்ச கடன் தொகையாக, ஒப்படைத்த பாலிசியின் மதிப்பில் (போனஸின் ரொக்க மதிப்பு உட்பட) இருந்து 90% (பேய்ட் அப் பாலிசி என்றால் 85%) அளிக்கப்படும்.

No comments:

Post a Comment