வாக்காளர் அடையாள அட்டை கலரில், ‘இ-சேவை’ மையங்களில் உடனே கையில் பகிருங்கள்
தமிழகம் முழுவதும் உள்ள 330 அதிகமான ‘இ-சேவை’ மையங்களில் இனி பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அட்டை உடனுக்குடன் கிடைக்கும். அதில் உங்கள் புதிய புகைப்படங்களையும் பதியும் வசதிகளும் தமிழக அரசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை கலரில், ‘இ-சேவை’ மையங்களில் உடனே கையில் |
இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறு¬யில், தமிழகத்தில் உள்ள ‘இ-சேவை’ மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள், இ-சேவைகளின் எண்ணிக்கை 300 அதிகரிகப்படும். அதன் ஒரு பகுதியாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ், 486 இ- சேவை மையங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில் சென்னையில் சில இடங்களில் இந்த சேவை நேற்று தொடங்கியது.
இந்த சேவைக்காக வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இ-சேவை மையங்களில் சென்று வாக்காளர் அட்டை எண்ணை தெரிவித்து, ரூ.25 கட்டணத்தில் பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு தரப்படும். வாக்காளர் அட்டை தொலைந்தாலும் அதனுடைய எண்ணை தெரிவித்து புதிய அட்டையும் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படம் தெளிவாக இல்லையெனில், புதிய புகைப்படத்தை இ&சேவை மையங்களின் சேவை வாயிலாக அங்கேயே எடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment